ETV Bharat / sports

முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு சம்மன்! என்ன வழக்கு தெரியுமா? - ED Summon Mohammad Azharuddin

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ED Summon Mohammad Azharuddin: முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீனுக்கு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Etv Bharat
Enforcement Directorate (IANS Photo)

தெலங்கானா: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 - 2023ஆம் ஆண்டு வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முகமது அசாருதீன் பதவி வகித்த காலத்தில் தான் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக் காலத்தில் ஐதராபாத்தில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர், கூடாரம் அமைத்தல் மற்றும் தீயணைப்பு சாதனங்களை வாங்கியதில் 20 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத் போலீசார் முகமது அசாருதீன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தன்னுடைய பெயரை கெடுக்கவும், தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த குற்றச்சாட்டுகள் கூறபடுவதாக அசாருதீன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அப்போது ஐதராபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த முகமது அசாருதீன் 4 வழக்குகளில் மூன்றுக்கு முன்ஜாமீன் பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிக ஊழல் புகார்கள் கொண்ட கிரிக்கெட் சங்கமாகவும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1984 - 2000 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய முகமது அசாருதீன், 1989 - 99 வரை கேப்டனாகவும் பதவி வகித்துள்ளார். முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 174 போட்டிகளில் விளையாடி 90 ஆட்டங்களில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்தித்த அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்! என்னக் காரணம்? - Chris Gayle Meet PM Modi

தெலங்கானா: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 - 2023ஆம் ஆண்டு வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முகமது அசாருதீன் பதவி வகித்த காலத்தில் தான் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பதவிக் காலத்தில் ஐதராபாத்தில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர், கூடாரம் அமைத்தல் மற்றும் தீயணைப்பு சாதனங்களை வாங்கியதில் 20 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத் போலீசார் முகமது அசாருதீன் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும், தன்னுடைய பெயரை கெடுக்கவும், தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்த குற்றச்சாட்டுகள் கூறபடுவதாக அசாருதீன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அப்போது ஐதராபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த முகமது அசாருதீன் 4 வழக்குகளில் மூன்றுக்கு முன்ஜாமீன் பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிக ஊழல் புகார்கள் கொண்ட கிரிக்கெட் சங்கமாகவும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1984 - 2000 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய முகமது அசாருதீன், 1989 - 99 வரை கேப்டனாகவும் பதவி வகித்துள்ளார். முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி 174 போட்டிகளில் விளையாடி 90 ஆட்டங்களில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை சந்தித்த அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்! என்னக் காரணம்? - Chris Gayle Meet PM Modi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.