ETV Bharat / state

கோவை காந்திபுரம் மேம்பாலம்: காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பு

கோவை: காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள இரண்டு அடுக்கு மேம்பாலத்தை காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

coimbatore
coimbatore
author img

By

Published : Jan 29, 2020, 3:49 PM IST

கோவை காந்திபுரம் 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலைவரை 75 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் 55 அடி உயரத்தில் இரண்டாவது அடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டதால் வாகனங்கள் பாலத்தின் மேல் பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனால், வாகனங்கள் பயணிக்கும் விதமாகவே பாலம் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், காந்திபுரம் இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களின் சோதனை ஓட்டம் கடந்த 8, 9ஆம் தேதிகளிளும், அதைத் தொடா்ந்து 10 முதல் 14ஆம் தேதி வரை நான்கு சக்கர மற்றும் இலகு ரக வாகனங்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 55 அடி உயர மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.

2017ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலம் 1.75 கிலோ மீட்டர் நீளமும், 11.6 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது.

காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, " 75 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுவருகிறது. கூடிய விரைவில் அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்திவருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்

கோவை காந்திபுரம் 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலைவரை 75 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் 55 அடி உயரத்தில் இரண்டாவது அடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டதால் வாகனங்கள் பாலத்தின் மேல் பயணிப்பதில் சிரமம் ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். ஆனால், வாகனங்கள் பயணிக்கும் விதமாகவே பாலம் கட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், காந்திபுரம் இரண்டாவது அடுக்கு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களின் சோதனை ஓட்டம் கடந்த 8, 9ஆம் தேதிகளிளும், அதைத் தொடா்ந்து 10 முதல் 14ஆம் தேதி வரை நான்கு சக்கர மற்றும் இலகு ரக வாகனங்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 55 அடி உயர மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார்.

2017ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலம் 1.75 கிலோ மீட்டர் நீளமும், 11.6 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது.

காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, " 75 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார். கோவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுவருகிறது. கூடிய விரைவில் அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்திவருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் கோயில் யானை: மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்

Intro:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கட்டிய புது மேம்பாலம் திறப்பு


Body:கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள 75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

கோவையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பணிகள் துவங்கபட்டு இன்று திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலம் அவனது 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை 1.75 கிலோ மீட்டர் நீளமும், 11.6 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட்டிருக்கிறது. இதனை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி மேம்பாலம் 75 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம் விளக்கப் பட்டிருக்கிறது என்றும் கோவையில் பல்வேறு நலத்திட்டங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தார். அதேபோல் கோவை அவினாசி சாலையில் 9.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார் மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.