ETV Bharat / state

அங்கன்வாடியில் புகுந்த பாம்பால் குழந்தைகள் அச்சம்!

author img

By

Published : Dec 20, 2019, 4:02 AM IST

கோவை: பொள்ளாச்சி ஏ.பி.டி. சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் புகுந்த நாகப்பாம்பால் குழந்தைகள் அச்சமடைந்தனர்.

cobra showed up in pollachi anganwadi which leads kids in a fear
அங்கன்வாடியில் புகுந்த பாம்பால் குழந்தைகள் அச்சம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.பி.டி. சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 27 குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு ஊழியர்கள் மதிய உணவு வழங்கினார்கள். பின்னர் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த பாயை எடுத்தபோது அதில் ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு பயந்த குழந்தைகளும் ஊழியர்களும் அந்த அறையைவிட்டு வெளியே ஓடினர்.

அதையடுத்து வனத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் அங்கன்வாடி மையத்துக்குள் செல்லாமல் வெளியே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். இதனால் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கால்நடை உதவியாளர் வினோத் குமார், அறையில் மரப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த பாம்பை பிடிக்க முற்பட்டபோது, பாம்பு அரைமணி நேரத்துக்கும் மேலாகப் படமெடுத்து ஆடியது. பின் ஒருவழியாக அந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

அங்கன்வாடியில் பாம்பைப் பிடிக்கும் காட்சி

அங்கன்வாடி மையத்தைச் சுற்றிலும் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுவதால் அடிக்கடி பாம்புகள் உள்ளே புகுந்து விடுகிறது எனப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேற்படி விபரீதம் நடக்காமல் இருக்க உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே பாம்பு கடித்து கர்ப்பிணி உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.பி.டி. சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 27 குழந்தைகள் படிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு ஊழியர்கள் மதிய உணவு வழங்கினார்கள். பின்னர் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த பாயை எடுத்தபோது அதில் ஐந்தடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்ததைக் கண்டு பயந்த குழந்தைகளும் ஊழியர்களும் அந்த அறையைவிட்டு வெளியே ஓடினர்.

அதையடுத்து வனத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் அங்கன்வாடி மையத்துக்குள் செல்லாமல் வெளியே செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். இதனால் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த கால்நடை உதவியாளர் வினோத் குமார், அறையில் மரப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த பாம்பை பிடிக்க முற்பட்டபோது, பாம்பு அரைமணி நேரத்துக்கும் மேலாகப் படமெடுத்து ஆடியது. பின் ஒருவழியாக அந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.

அங்கன்வாடியில் பாம்பைப் பிடிக்கும் காட்சி

அங்கன்வாடி மையத்தைச் சுற்றிலும் பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில், மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுவதால் அடிக்கடி பாம்புகள் உள்ளே புகுந்து விடுகிறது எனப் பள்ளி மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேற்படி விபரீதம் நடக்காமல் இருக்க உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே பாம்பு கடித்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Intro:snackBody:snackConclusion:பொள்ளாச்சி ஏபிடி ரோடு அங்கன்வாடி மையத்தில் புகுந்து படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு குழந்தைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி.' டிச-19
பொள்ளாச்சி ஏபிடி ரோட்டில் உள்ள நகரமன்ற நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் மேலும் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 27 குழந்தைகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஊழியர்கள் மதிய உணவு வழங்கினார்கள் பின்னர் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த பாயை எடுத்தபோது அதில் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளும் ஊழியர்களும் வெளியே ஓடினர் பின்னர் வனத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர் ஆனால் நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் வராததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் அங்கன்வாடி மையத்துக்குள் செல்லாமல் வெளிேய செய்வதறியாது நின்றிருந்தனர் பின்னர் அப்பகுதி மக்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த கால்நடை உதவியாளர் வினோத் குமார் மரப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த பாம்பை பிடித்தபோது பாம்பு அரைமணி நேரத்துக்கு மேல் படமெடுத்து ஆடியது பின்னர் 5 அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார் இதனால் அங்குள்ள ஆசிரியர்களும் பள்ளிக் குழந்தைகளும் நிம்மதி அடைந்தனர் அங்கன்வாடி மையத்தை சுற்றியும் பல மாதங்களாக கிடைப்பதாலும் மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுவதால் அடிக்கடி பாம்புகள் உள்ளே புகுந்து விடுவதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அங்கன்வாடி மையத்தை சுத்தம் செய்யவில்லை என்று புகார் தெரிவித்துள்ள மாணவர்கள் விபரீதம் நடக்காமல் இருக்க உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றியும் சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.