ETV Bharat / state

கோவையில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்.. மக்கள் பீதி..

author img

By

Published : Jan 18, 2023, 1:35 PM IST

Updated : Jan 18, 2023, 1:42 PM IST

வால்பாறை அடுத்த கூட்டுறவு காலனி பகுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வால்பாறையில் அதிகளவில் நடமாடும் சிறுத்தைகள்
வால்பாறையில் அதிகளவில் நடமாடும் சிறுத்தைகள்
வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூட்டுறவு காலனி பகுதியில் சிறுத்தை ஒன்று நாயை வாயில் கவ்விக் கொண்டு செல்லும் வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டவுன் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதி மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பகுதியில் அதிக அளவில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு நேரங்களில் கலைக்கல்லூரி வளாக கழிப்பறை பகுதியில் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே நடந்து வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் தங்களது குடியிருப்புக்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.

வால்பாறை டவுன் பகுதியில் ஆடு, கோழி, நாய், பூனை உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளை மட்டுமின்றி காட்டுப் பன்றிகள் அதிகளவில் உள்ளன. இதனை பிடிப்பதற்காகவே இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலா வருகிறது. வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் நாடு திரும்பினர்

வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கூட்டுறவு காலனி பகுதியில் சிறுத்தை ஒன்று நாயை வாயில் கவ்விக் கொண்டு செல்லும் வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட டவுன் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதி மற்றும் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பகுதியில் அதிக அளவில் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இரவு நேரங்களில் கலைக்கல்லூரி வளாக கழிப்பறை பகுதியில் இருந்து இரண்டு சிறுத்தைகள் வெளியே நடந்து வரும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் தங்களது குடியிருப்புக்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.

வால்பாறை டவுன் பகுதியில் ஆடு, கோழி, நாய், பூனை உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளை மட்டுமின்றி காட்டுப் பன்றிகள் அதிகளவில் உள்ளன. இதனை பிடிப்பதற்காகவே இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலா வருகிறது. வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் நாடு திரும்பினர்

Last Updated : Jan 18, 2023, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.