ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கு: நூதன விசாரணையை கையாளும் சிபிஐ!

author img

By

Published : Apr 29, 2019, 1:00 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு ரகசியமான முறையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

pollachi

பொள்ளாச்சியில் ஏராளமான இளம் பெண்களுடன் நட்பாகப் பழகி, ஏமாற்றி ஆபாசமாக படம்பிடித்து ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் வாரிசுகளுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து, ஏழு ஆண்டுகளாக இந்த சித்ரவதைகள் நீடித்தது தொடர்பாகவும், அரசியல் கட்சியினரின் தலையீடு குறித்தும், வேறு முக்கியப் புள்ளிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்றும் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதை, வெளிப்படையாக மேற்கொள்ளாமல், சிபிசிஐடி காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து ரகசியமாக சிபிஐ நூதன முறையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினருக்கே முறையான தகவல்கள் இல்லாததால் அவர்களே கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சியில் ஏராளமான இளம் பெண்களுடன் நட்பாகப் பழகி, ஏமாற்றி ஆபாசமாக படம்பிடித்து ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவரின் வாரிசுகளுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி பெரும் பேசு பொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ வசம் மாற்றப்பட்டது. இதையடுத்து, ஏழு ஆண்டுகளாக இந்த சித்ரவதைகள் நீடித்தது தொடர்பாகவும், அரசியல் கட்சியினரின் தலையீடு குறித்தும், வேறு முக்கியப் புள்ளிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்றும் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதை, வெளிப்படையாக மேற்கொள்ளாமல், சிபிசிஐடி காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து ரகசியமாக சிபிஐ நூதன முறையில் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினருக்கே முறையான தகவல்கள் இல்லாததால் அவர்களே கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனைவரது கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நேற்று பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு சம்பந்தமான விசாரணையை துவக்கிய சிபிஐ அதிகாரிகள் கோவையில் இருந்து நேற்று பிற்பகல் பொள்ளாச்சி வந்த சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக பொதுமக்களோடு மக்களாக தங்களது விசாரணையை துவக்கியுள்ளனர் இந்த சம்பவம் 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது  என்று புகார் உள்ளதால் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்னென்ன இந்த பிரச்சினை எங்கிருந்து ஆரம்பித்தது என்பது குறித்து குற்றவாளிகளின் செல்போன் எண்களின் தொடர்புகள் முகநூல் பரிமாற்றங்கள் குறித்து  ஆய்வு செய்து வருகின்றனர் அதேபோல் இதற்கு முன்பு ஆனைமலை கோட்டூர் காவல் நிலையங்களில் இவர்கள் மீது புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது அந்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கம்மந்தப்பட்டு  உள்ளார்களா? அரசியல் புள்ளிகள் தலையீடு அரசியல் பிரமுகர்கள் சம்மந்தப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணையை துவக்கி உள்ளதாக தெரிகிறது அதேபோல் நேற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் விசாரணையை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது சிபிஐ அதிகாரி களை பொறுத்தவரை அவர்கள் விசாரணையை எங்கிருந்து துவக்குகிறார்கள்  என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை அவர்கள் வரும் வாகனங்கள் கூட எது என்று தெரிய வாய்ப்பில்லை அதேபோல் சிபிசிஐடி கொடுத்த அனைத்து ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு ரகசிய இடத்தில் பொள்ளாச்சியில் முகாமிட்டு சம்பந்தப்பட்டவர்களை அங்கு அழைத்து விசாரித்தனர் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது சிபிசிஐடி அதிகாரிகள் ஏற்கனவே குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதால்  அந்த ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது அதேபோல் இந்த வழக்கு சம்பந்தமான ஆனைமலை காவல் நிலையம் கோட்டூர் காவல் நிலையம் கிழக்கு காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய அதிகாரிகளையும் ரகசியமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை சிறப்பு அனுமதி பெற்று சிறைக்குள்ளேயே அவர்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது தற்போது சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து விட்டார்களா இல்லையா என்ற குழப்பம் பொள்ளாச்சியில் போலீசார் மத்தியில் அதிகரித்துள்ளது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.