ETV Bharat / state

ரஃபேல் ஊழலில் பிரதமருக்கு பங்கிருக்கிறது- சீதாராம் யெச்சூரி - கோவை

கோவை: ரஃபேல் ஊழலில் பிரதமருக்கு பங்கிருப்பதாகவும், இது தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

சீதாராம் யெச்சூரி
author img

By

Published : Apr 10, 2019, 9:21 PM IST

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் "ரஃபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மிக முக்கியமானது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் தொடர்பாக மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் விவகார ஊழலில் பிரதமருக்கு பங்கு இருக்கிறது. இதுதொடர்பாக உண்மை வெளிவர வேண்டும். இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது.

பாஜகவின் தேர்தல் ஆணையம் குழந்தையின் கையில் உள்ள விளையாட்டு பொம்மை போன்றது. சிபிஐ அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது" என்றார்.

சீதாராம் யெச்சூரி

கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் "ரஃபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மிக முக்கியமானது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் தொடர்பாக மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் விவகார ஊழலில் பிரதமருக்கு பங்கு இருக்கிறது. இதுதொடர்பாக உண்மை வெளிவர வேண்டும். இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது.

பாஜகவின் தேர்தல் ஆணையம் குழந்தையின் கையில் உள்ள விளையாட்டு பொம்மை போன்றது. சிபிஐ அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது" என்றார்.

சீதாராம் யெச்சூரி
சு.சீனிவாசன்.        கோவை


நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் எனவும், இந்த தேர்தலில் மக்கள் சுனாமி வருமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.


கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.  ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மிக முக்கியமானது எனவும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறிய அவர், ரபேல் விவகார ஊழலில் பிரதமருக்கு பங்கு இருக்கிறது என தெரிவித்தார். மேலும்  இதுதொடர்பாக உண்மை வெளிவர வேண்டும் எனவும், இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். ரபேல் ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பிருக்காத ஏனவும், ஆனால் உறுதியான நடவடிக்கைகள் மூலம் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் கூறினார்
மஹாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகளை மீறி இராணுவ வீரர்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம் எனவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாஜகவின் தேர்தல் ஆணையம் குழந்தையின் கையில் உள்ள விளையாட்டு பொம்மை போன்றது எனவும், சிபிஐ அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். பி.எம்.மோடி படத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்புக்குரியது எனக்கூறிய அவர் ஆனால் அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது எதற்கு என கேள்வி எழுப்பினார். பிரதமர் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் எனவும், ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் செய்து வரும் அரசால் பொய்யாக பேசப்பட்டு வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் அலுவலர்களே தவறு செய்யும்பொழுது தேர்தல் ஆணையம் மௌனமாக இருக்கிறது எனவும், தேர்தல் ஆணையம் மீதே குற்றச்சாட்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் போன்றது எனவும் அவர் கூறினார். நாடாளுமனாற தைராதல் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல் எனவும், இந்த தேர்தலில் மக்கள் சுனாமி வரும் எனவும் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.