ETV Bharat / state

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவ வரைபடம் கோவையில் அறிமுகம்! - பார்வையற்றோருக்கான பிரத்யேக வரைபடம் கோவையில் அறிமுகம்

கோவை: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென பிரெயில் எழுத்து முறையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட வரைபடம் கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Braille letters in Coimbatore railway station
author img

By

Published : Nov 6, 2019, 2:30 PM IST

Updated : Nov 6, 2019, 7:44 PM IST

பிரெயில் என்ற எழுத்து முறை பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்க உருவாக்கப்பட்ட முறையாகும். இதில் ஒவ்வொரு எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வக வடிவ கலத்தில் பொறிக்கப்பட்டவை. இந்தச் செவ்வக கட்டத்தில் ஒவ்வொரு எழுத்துகளும் துளையின் மூலம் சுட்டிக் காட்டப்படும். பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வின் மூலம் இந்த எழுத்துகளைக் கண்டறிகின்றனர். இந்த எழுத்து முறையை ஃபிரான்ஸ் நாட்டு லூயிஸ் பிரெயில் 1824ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

இந்த முறையை அறிமுகம் செய்தபோது ஒரு சிலர் மட்டுமே படித்துவந்த நிலையில், தற்போது பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவருமே படிக்கத் தொடங்கிவிட்டனர். பல்கலைக்கழகத்திலும் பள்ளி கல்லூரிகளும்கூட இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவ வரைபடம் கோவையில் அறிமுகம்!

இம்முறை பொது இடங்களில் வரைபடமாக வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில், தற்போது கோவை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ரயில் நிலையத்தின் முழு கட்டட அமைப்பும் பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில், பயணச்சீட்டு பதிவு செய்யும் இடம், தளங்கள், கழிவறை, படிகள், தானியங்கி படிகள் போன்ற அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் நன்மை அளிக்கிறது என்கின்றனர் பார்வை மாற்றுத்திறனாளிகள்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு மேற்கு மண்டல பார்வை மாற்றுத்திறனாளிகள் தேசிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி. சதாசிவம், “இது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். புதிதாக வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட அவசியம் இருக்காது" எனத் தெரிவித்தார்.

பிரெயில் என்ற எழுத்து முறை பார்வை மாற்றுத்திறனாளிகள் படிக்க உருவாக்கப்பட்ட முறையாகும். இதில் ஒவ்வொரு எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வக வடிவ கலத்தில் பொறிக்கப்பட்டவை. இந்தச் செவ்வக கட்டத்தில் ஒவ்வொரு எழுத்துகளும் துளையின் மூலம் சுட்டிக் காட்டப்படும். பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வின் மூலம் இந்த எழுத்துகளைக் கண்டறிகின்றனர். இந்த எழுத்து முறையை ஃபிரான்ஸ் நாட்டு லூயிஸ் பிரெயில் 1824ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

இந்த முறையை அறிமுகம் செய்தபோது ஒரு சிலர் மட்டுமே படித்துவந்த நிலையில், தற்போது பார்வை மாற்றுத்திறனாளிகள் அனைவருமே படிக்கத் தொடங்கிவிட்டனர். பல்கலைக்கழகத்திலும் பள்ளி கல்லூரிகளும்கூட இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்துவ வரைபடம் கோவையில் அறிமுகம்!

இம்முறை பொது இடங்களில் வரைபடமாக வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில், தற்போது கோவை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ரயில் நிலையத்தின் முழு கட்டட அமைப்பும் பொறிக்கப்பட்டுள்ளது. நுழைவாயில், பயணச்சீட்டு பதிவு செய்யும் இடம், தளங்கள், கழிவறை, படிகள், தானியங்கி படிகள் போன்ற அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் நன்மை அளிக்கிறது என்கின்றனர் பார்வை மாற்றுத்திறனாளிகள்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு மேற்கு மண்டல பார்வை மாற்றுத்திறனாளிகள் தேசிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி. சதாசிவம், “இது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும். புதிதாக வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதவியை நாட அவசியம் இருக்காது" எனத் தெரிவித்தார்.

Intro:கோவை ரயில் நிலையத்தில் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்து முறை அடங்கிய வரைபடம்


Body:கோவை ரயில் நிலையத்தில் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்து முறை அடங்கிய வரைபடம் தற்போது (4.11.2019) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தென்னக இரயில்வே துறையில் முதல் முறையாகும்.

பிரெயில் என்ற எழுத்து முறை பார்வையற்றவர்கள் படிக்க உருவாக்கப்பட்ட முறையாகும். இதில் ஒவ்வொரு எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வக வடிவ கலத்தில் பொறிக்கப்பட்டவை. எந்த செவ்வக கட்டத்தில் ஒவ்வொரு எழுத்துகளும் துளையின் மூலம் சுட்டிக் காட்டப்படும். பார்வையற்றவர்கள் தொடு உணர்வின் மூலம் இந்த எழுத்துகளை கண்டறிகின்றனர். இந்த எழுத்து முறையை பிரான்ஸ் நாட்டு லூயிஸ் பிரெயில் 1824ம் ஆண்டு தோற்றுவித்தார். உலகம் முழுவதும் பிரெயில் தினம் வருடம் தோறும் ஜனவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த முறையை அறிமுகம் செய்த போது ஒரு சிலர் மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது பார்வையற்றவர்கள் அனைவருமே படிக்க தொடங்கிவிட்டனர். பல்கலைக்கழகத்திலும் பள்ளி கல்லூரிகளும் கூட இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

இம்முறை பொது இடங்களில் வரைபடமாக வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில் கோவை இரயில் நிலையத்தில் வைக்கபட்டு இருக்கிறது. இதில் கோவை ரயில் நிலையத்தின் முழு கட்டிட அமைப்பும் பொறிக்கப்பட்டு உள்ளது. நுழைவாயில், பயணச்சீட்டு பதிவு செய்யும் இடம், தளங்கள், கழிவறை, படிகள், தானியங்கி படிகள், போன்ற அனைத்தும் பொறிக்கப்பட்டுள்ளன இது மிகவும் நன்மை அளிக்கிறது என்று பார்வையற்றவர்கள் பலரும் கூறுகின்றனர்.

இந்த வரைபடத்தின் நன்மையை பற்றி தமிழ்நாடு மேற்கு மண்டல பார்வையற்றோர் தேசிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சதாசிவம் கூறுகையில் இது பார்வையற்றவர்களுக்கு சிறந்த உதவியாக இருக்கும் என்றும் புதிதாக வரும் பார்வையற்றவர்கள் மற்றவர்களின் உதவியை நாட அவசியம் இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது வைக்கப்பட்டுள்ள இந்த வரைபடத்தில் ஆங்கில மொழி மட்டுமே உள்ளது என்றும் விரைவில் தமிழ் மொழி இந்தி மொழி போன்ற மொழிகளும் வைக்கப்பட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அதே போல் சில நாட்களுக்கு முன் ரயில்களில் பார்வையற்றவர்களுக்கென இருந்த சிறப்பு பெட்டிகள் அகற்றப்பட்டு சிரமம் ஏற்ப்பட்டது ஆனால் அதை மறுபடியும் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த உதவிகளை எல்லாம் செய்து கொடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அதன் பின் பேசிய பயணி தேவராஜ் இந்த வரைபட திட்டம் பார்வையற்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர்கள் யாரையும் உதவிக்காக நாட வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார். இந்த முறை பொது இடங்களான மருத்துவமனை, பேருந்து நிலையம், போன்ற இடங்களில் வைத்தால் இன்னும் நன்மையாக இருக்கும் என்று கூறினார்.


Conclusion:
Last Updated : Nov 6, 2019, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.