ETV Bharat / state

யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

author img

By

Published : Jun 21, 2023, 12:03 PM IST

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்
பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்
பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: உலக யோகா தினம் (ஜூன் 21) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜகவினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன் படி கோவை மாநகரில் உள்ள உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் யோகா பயிற்சியினைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்று உள்ளது. மேலும் உலக நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகின்றது. மேலும், உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு - மருத்துவமனை அறிக்கை

மேலும் பேசிய அவர், “கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காக்களில் யோகா செய்வதற்கான தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது என்று கூறினார். மேலும் யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழி தவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும்” என்றார்.

“தினமும் 30 நிமிடங்கள் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி
அறுவை சிகிச்சை நடந்து பூரண குணமாக வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதைத் தான் நினைப்பார்கள்” என்றார்.

அதே போல் கோவை மாநகர காவல்துறையினருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: International yoga day: 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய சிறுமி

பாஜக சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: உலக யோகா தினம் (ஜூன் 21) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜகவினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன் படி கோவை மாநகரில் உள்ள உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் யோகா பயிற்சியினைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்று உள்ளது. மேலும் உலக நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகின்றது. மேலும், உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு - மருத்துவமனை அறிக்கை

மேலும் பேசிய அவர், “கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காக்களில் யோகா செய்வதற்கான தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்மந்தமான விசயம் கிடையாது, ஆரோக்கியம் தொடர்பானது என்று கூறினார். மேலும் யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழி தவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும்” என்றார்.

“தினமும் 30 நிமிடங்கள் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி
அறுவை சிகிச்சை நடந்து பூரண குணமாக வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதைத் தான் நினைப்பார்கள்” என்றார்.

அதே போல் கோவை மாநகர காவல்துறையினருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: International yoga day: 2 நிமிடங்களில் 40 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய சிறுமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.