ETV Bharat / state

சாலையோர மரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர்: கடன் தொல்லை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையோர மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

author img

By

Published : Aug 2, 2021, 1:35 PM IST

suicide
suicide

கோயம்புத்தூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடன் தொல்லை காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (ஆகஸ்ட்.02) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியுற்று காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை தீர்வல்ல

இந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் ஆனந்த் குமாரின் உடலை மீட்டனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடித்தையும் கைப்பற்றினர்.

அதன்பின் உடற்கூராய்வுக்காக ஆனந்த் குமாரின் உடலை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் தொல்லையால் பொது இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாயத்த கூட்டிருவோம்... அறியா சிறுமி உயிரைக் குடித்த நால்வரின் மிரட்டல்

கோயம்புத்தூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடன் தொல்லை காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (ஆகஸ்ட்.02) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியுற்று காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை தீர்வல்ல

இந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் ஆனந்த் குமாரின் உடலை மீட்டனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடித்தையும் கைப்பற்றினர்.

அதன்பின் உடற்கூராய்வுக்காக ஆனந்த் குமாரின் உடலை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் தொல்லையால் பொது இடத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாயத்த கூட்டிருவோம்... அறியா சிறுமி உயிரைக் குடித்த நால்வரின் மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.