ETV Bharat / state

கோவைக்கு வரும் டூரிஸ்ட் அமைச்சரை மக்கள் ரசிக்கமாட்டார்கள்  - அண்ணாமலை

author img

By

Published : Feb 7, 2022, 6:13 PM IST

Updated : Feb 7, 2022, 7:52 PM IST

'கோவை மாவட்டம் என்பது திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை போன்றது. ஆனால், அது மணக்காது. கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார் (அமைச்சர் செந்தில் பாலாஜி) அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார். இதைக் கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள்' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
கோவை மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை வடவள்ளிப்பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி வேட்பாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய அவர், 'ஆங்கிலேயர் எப்போது இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று மக்கள் சிந்தித்ததைப்போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி கிடைப்பதை நிறுத்தி வைத்தது.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

கோவை மாவட்டம் என்பது திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை போன்றது. ஆனால், அது மணக்காது. கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார். அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார்.

இதைக் கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள். அரவக்குறிச்சி மாடல் எலெக்சன் என்பதைப் போல், சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்த முதல் தேர்தல், அரவக்குறிச்சி தேர்தல்.

'சமூக வலைதள பரப்புரைகளை அதிகம் செய்க'

மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும், மக்களுக்கும் வாக்கு பெட்டிக்கும் இணைப்புப்பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். நகர்ப்புற தேர்தலில் பாஜக பலத்தைத் தெரிந்து கொள்ளவே தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்புரை தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.

நேற்றிலிருந்து திமுக பொய் சொல்லத் தொடங்கிவிட்டது. பாஜகவை எதிர்த்துத் தான் அரசியல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்து விட்டார்.

கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை அது மணக்காது - அண்ணாமலை

'திமுக அரசு பல விஷயங்களை மறைக்கிறது'

பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களைக் காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீட் மூலமாக இருளர் சமூகத்திலிருந்து நீட் தேர்வு மூலம் தேர்வு பெற்றுள்ளனர். மதுரை மாணவிக்கு பாஜக மாவட்டத் தலைவர் முழுக்கட்டணம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக எம்.பி., காந்திசெல்வன் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தான் செட் (CET- காமன் எலிஜிபிலிட்டி டெஸ்ட்)தேர்வைக் கொண்டு வந்தார்.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
கோவை மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழ்நாடு அரசு அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டில் 833 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருவது போன்ற மத்திய அரசின் திட்டங்களை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

வேட்பு மனு பரிசீலனையின் போது ஆளும்கட்சியின் தலையீடு அதிகம் இருந்தது. திமுக தோல்வி முகத்தைச் சந்திக்கத் தொடங்கியதை அது உறுதிப்படுத்துகிறது. எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரது காலிலும் விழுந்து வாக்கு கேட்க வேண்டும். சகோதர சகோதரிகள்போல் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்' எனக் கூறினார்.

'மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான்'

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தைக் காட்டுகிறது. ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளைச் சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம்.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
கோவை மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

2016இல் நீட் தேர்வு மசோதா குடியரசுத்தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது. ஆனால், அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணிக்கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, நீட் தேர்விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல. 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்தது. ஆனால், பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பார்கள். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்துச் செல்வதே இலக்கு.

கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான். இந்து என்பது மதமே கிடையாது. அது ஒரு வாழ்வியல் முறை. மதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எத்தனை முறை சிபிஐ விசாரணைக்குக் கோரினார் என்பதை எண்ணிப்பாருங்கள்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் வானதி சீனிவாசன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை வடவள்ளிப்பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி வேட்பாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய அவர், 'ஆங்கிலேயர் எப்போது இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று மக்கள் சிந்தித்ததைப்போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி கிடைப்பதை நிறுத்தி வைத்தது.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

கோவை மாவட்டம் என்பது திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை போன்றது. ஆனால், அது மணக்காது. கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார். அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார்.

இதைக் கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள். அரவக்குறிச்சி மாடல் எலெக்சன் என்பதைப் போல், சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்த முதல் தேர்தல், அரவக்குறிச்சி தேர்தல்.

'சமூக வலைதள பரப்புரைகளை அதிகம் செய்க'

மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும், மக்களுக்கும் வாக்கு பெட்டிக்கும் இணைப்புப்பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். நகர்ப்புற தேர்தலில் பாஜக பலத்தைத் தெரிந்து கொள்ளவே தனித்துப் போட்டியிடுகிறது. இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்புரை தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.

நேற்றிலிருந்து திமுக பொய் சொல்லத் தொடங்கிவிட்டது. பாஜகவை எதிர்த்துத் தான் அரசியல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்து விட்டார்.

கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை அது மணக்காது - அண்ணாமலை

'திமுக அரசு பல விஷயங்களை மறைக்கிறது'

பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களைக் காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீட் மூலமாக இருளர் சமூகத்திலிருந்து நீட் தேர்வு மூலம் தேர்வு பெற்றுள்ளனர். மதுரை மாணவிக்கு பாஜக மாவட்டத் தலைவர் முழுக்கட்டணம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக எம்.பி., காந்திசெல்வன் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தான் செட் (CET- காமன் எலிஜிபிலிட்டி டெஸ்ட்)தேர்வைக் கொண்டு வந்தார்.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
கோவை மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு தமிழ்நாடு அரசு அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டில் 833 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருவது போன்ற மத்திய அரசின் திட்டங்களை வேட்பாளர்கள் பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

வேட்பு மனு பரிசீலனையின் போது ஆளும்கட்சியின் தலையீடு அதிகம் இருந்தது. திமுக தோல்வி முகத்தைச் சந்திக்கத் தொடங்கியதை அது உறுதிப்படுத்துகிறது. எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரது காலிலும் விழுந்து வாக்கு கேட்க வேண்டும். சகோதர சகோதரிகள்போல் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்' எனக் கூறினார்.

'மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான்'

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தைக் காட்டுகிறது. ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளைச் சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம்.

மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
கோவை மாவட்டம் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா

2016இல் நீட் தேர்வு மசோதா குடியரசுத்தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது. ஆனால், அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணிக்கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, நீட் தேர்விற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல. 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்தது. ஆனால், பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பார்கள். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்துச் செல்வதே இலக்கு.

கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான். இந்து என்பது மதமே கிடையாது. அது ஒரு வாழ்வியல் முறை. மதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எத்தனை முறை சிபிஐ விசாரணைக்குக் கோரினார் என்பதை எண்ணிப்பாருங்கள்’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் வானதி சீனிவாசன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை

Last Updated : Feb 7, 2022, 7:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.