ETV Bharat / state

'அக்னிபாத்' வீரர்களுக்கு இஸ்ரோவிலும் வேலை - இஸ்ரோ தலைவர் சோமநாத்

author img

By

Published : Jul 10, 2022, 7:29 AM IST

Updated : Jul 10, 2022, 12:56 PM IST

அக்னிபாத் திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகள் பணி முடிந்து வரும் வீரர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோமனாத் தெரிவித்துள்ளார்.

Job in ISRO for Agni soldiers after 4 years taraining ISRO Chief
Job in ISRO for Agni soldiers after 4 years taraining ISRO Chief

கோயம்புத்தூர்: காருண்யா பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமனாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1,700 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அக்னிபாத் பயிற்சி முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுவரை அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணிகள் செய்து வந்த இஸ்ரோ, இனி தனியாருக்கும் சேவை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வர்த்தக ரீதியாகவும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியாருக்கு புதிதாக சேட்டிலைட் பயன்பாடு வழங்கப்படும்.

'அக்னிபாத்' வீரர்களுக்கு இஸ்ரோவிலும் வேலை - இஸ்ரோ தலைவர் சோமநா

தனியாருக்கு தேவையான சேட்டிலைட்டுகளை ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவும் வசதிகளும் செய்து தரப்படும். இந்தாண்டு இரண்டு பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அடுத்ததாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் விரைவில் ஏவப்படும். இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 விரைவில் ஏவப்படும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாடு அரசு 2,000 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடியும்" என இஸ்ரோ தலைவர் சோமனாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை நிலைநாட்டியது பிஎஸ்எல்வி சி-53

கோயம்புத்தூர்: காருண்யா பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமனாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1,700 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அக்னிபாத் பயிற்சி முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதுவரை அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணிகள் செய்து வந்த இஸ்ரோ, இனி தனியாருக்கும் சேவை செய்ய முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வர்த்தக ரீதியாகவும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். தனியாருக்கு புதிதாக சேட்டிலைட் பயன்பாடு வழங்கப்படும்.

'அக்னிபாத்' வீரர்களுக்கு இஸ்ரோவிலும் வேலை - இஸ்ரோ தலைவர் சோமநா

தனியாருக்கு தேவையான சேட்டிலைட்டுகளை ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவும் வசதிகளும் செய்து தரப்படும். இந்தாண்டு இரண்டு பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அடுத்ததாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் விரைவில் ஏவப்படும். இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 விரைவில் ஏவப்படும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழ்நாடு அரசு 2,000 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடியும்" என இஸ்ரோ தலைவர் சோமனாத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை நிலைநாட்டியது பிஎஸ்எல்வி சி-53

Last Updated : Jul 10, 2022, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.