ETV Bharat / state

ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒருவருக்கு தொடர்பு? - சிறுமியின் உடலிலிருந்து மேலும் ஒருவரின் விந்தணு

கோயம்புத்தூர்: பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

murder
murder
author img

By

Published : Dec 26, 2019, 8:43 PM IST

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பொ.ரத்தினம்

இந்நிலையில், கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், "பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூடுதலாக ஒரு நபரின் டிஎன்ஏ கலந்திருப்பதாக தகவல் அறிக்கையில் உள்ளது. இதனை மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறுமி வழக்கில் தடயவியல் துறை சோதனை

இந்த விவகாரத்தில் யாரும் மனு அளிக்க தேவையில்லை. நீதிமன்றமே இதைச் செய்திருக்கலாம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் டிஎன்ஏ உடன் மற்றொரு நபரின் டிஎன்ஏவும் கலந்துள்ளது தடயவியல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் அதை தள்ளிவைக்க வாய்ப்பில்லை .

அதே நேரத்தில் மற்றொரு நபரை கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் என்று மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: உழைப்பு தான தினம்: அரசுப் பள்ளியில் பழுதடைந்த பொருள்களை சீரமைத்த தொண்டு அமைப்பு!

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பை, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பொ.ரத்தினம்

இந்நிலையில், கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், "பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கூடுதலாக ஒரு நபரின் டிஎன்ஏ கலந்திருப்பதாக தகவல் அறிக்கையில் உள்ளது. இதனை மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சிறுமி வழக்கில் தடயவியல் துறை சோதனை

இந்த விவகாரத்தில் யாரும் மனு அளிக்க தேவையில்லை. நீதிமன்றமே இதைச் செய்திருக்கலாம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் டிஎன்ஏ உடன் மற்றொரு நபரின் டிஎன்ஏவும் கலந்துள்ளது தடயவியல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் அதை தள்ளிவைக்க வாய்ப்பில்லை .

அதே நேரத்தில் மற்றொரு நபரை கண்டுபிடித்து விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் என்று மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: உழைப்பு தான தினம்: அரசுப் பள்ளியில் பழுதடைந்த பொருள்களை சீரமைத்த தொண்டு அமைப்பு!

Intro:பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரின் விந்தணு உள்ளதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.


Body:கோவை பன்னிமடை பகுதியில் 7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரின் விந்தணு உள்ளதாக தடவியல் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பொ.இரத்தினம் கூறினார்.

கோவை பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கூடுதலாக ஒரு நபரின் டிஎன்ஏ கலந்து இருப்பதாக தகவல் அறிக்கையில் உள்ளது என தெரிவித்தார். இதை வைத்து மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் யாரும் மனு அளிக்க தேவையில்லை என்றும் நீதிமன்றமே இதைச் செய்திருக்கலாம் என்றும் கூறினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் டிஎன்ஏ உடன் மற்றொரு நபரின் டிஎன்ஏ வும் கலந்துள்ளதை தடவியல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் அதை தள்ளிவைக்க வாய்ப்பில்லை என்றும் அதே நேரத்தில் மற்றொரு நபரை கண்டு பிடித்து விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் என்று மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 26 அன்று காணாமல் போனதும் 27ம் தேதி அவரது பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

நாளை சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில் மற்றொரு நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.