ETV Bharat / state

ஈஷா யோக மையத்தின் அருகே பிடிபட்ட 15 அடி ராஜ நாகம்!

author img

By

Published : Dec 26, 2019, 8:31 PM IST

கோவை: வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 15 அடி நீளமுள்ள ராஜ நாகம் பிடிபட்டது.

king cobra
king cobra

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தானிகண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஈஷா யோக மையம் உள்ளது. இதன் பின்புறம் சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் சாலையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பாம்பு பிடிப்பதற்கு தேவையான கருவிகள் ஏதும் இல்லாததால் செய்வதறியாது நின்றுள்ளனர். அப்போது தீடீரென ஈஷா யோக மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் 15அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு சாக்குப்பையில் அடைக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

பிடிப்பட்ட 15 அடி ராஜ நாகம்

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் தனியார் தோட்டத்தில் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கழுத்தில் பாம்பு கையில் விலங்கு: பாம்பு வித்தை காட்டிய பெண் சாமியார் கைது!

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தானிகண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஈஷா யோக மையம் உள்ளது. இதன் பின்புறம் சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் சாலையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பாம்பு பிடிப்பதற்கு தேவையான கருவிகள் ஏதும் இல்லாததால் செய்வதறியாது நின்றுள்ளனர். அப்போது தீடீரென ஈஷா யோக மையத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் 15அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பு சாக்குப்பையில் அடைக்கப்பட்டு வெள்ளியங்கிரி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

பிடிப்பட்ட 15 அடி ராஜ நாகம்

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் தனியார் தோட்டத்தில் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கழுத்தில் பாம்பு கையில் விலங்கு: பாம்பு வித்தை காட்டிய பெண் சாமியார் கைது!

Intro:கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பிடிப்பட்ட 15 அடி நீளமுள்ள ராஜ நாகம்Body:கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வெள்ளிங்கிரி மலை பகுதியில் அமைந்துள்ளது இப்பகுதியில் ஏராளமான யானைகள் காட்டெருமைகள் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் உணவு தேடி வருவது வழக்கம் இந்நிலையில் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட உட்பட்ட தானிகண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஈஷா யோக மையத்தின் பின்புறம் சுமார் 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் சாலையோரத்தில் படுத்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் செல்லாதவாறு பாதுகாப்பு அளித்தனர். இதனை அடுத்து ஈஷா யோக மையத்தில் இருந்த சிலர் இந்த பதினைந்து அடி நீளமுள்ள பாம்பை லாவகமாக பிடித்து வெள்ளிங்கிரி மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர் ஏற்கனவே அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் தனியார் தோட்டத்தில் பிடிபட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் ராஜநாகம் பிடிபட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ராஜநாகம் சாலையோரத்தில் இருப்பதாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் அவர்களிடம் பாம்பு பிடிப்பதற்கு தேவையான கருவிகள் ஏதும் இல்லாததால் ஈஷா யோக மையத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பாம்பை பிடித்ததாகவும் வனத்துறையினர் பாம்புகளை பிடிக்க கருவிகள் வைத்திருக்க வேண்டும் ஆனால் அந்த மாதிரியான கருவிகள் வனத்துறையிடம் தற்போது இல்லாததே இதுபோன்ற சூழலில் பாம்பு பிடிப்பதில் சிரமம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.