ETV Bharat / state

இருசக்கர வாகன திருட்டு - ஆந்திராவில் இளைஞர்கள் கைது

author img

By

Published : Mar 9, 2022, 12:35 PM IST

தமிழ்நாட்டில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திராவில் விற்றுவந்த இளைஞர்களை ஆந்திரா காவல் துறையினர் பிடித்து சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இருசக்கர வாகன திருட்டு
இருசக்கர வாகன திருட்டு

சென்னை: ஆந்திர மாநிலம் கஜல மண்டியம் காவல் துறையினர் ஆந்திராவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் என்பது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திராவில் விற்று வருவது தெரியவந்தது. இந்த திருட்டுக்கு கூட்டாளியாக இருந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரையும் ஆந்திரா கஜல மண்டியம் காவல் துறையினர் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருட்டு நடந்த இடம் சென்னை கொடுங்கையூரில் இருப்பதால் ஆந்திர காவல் துறையினர் கொடுங்கையூர் காவல் துறையினருக்கு் தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஆந்திரா சென்ற கொடுங்கையூர் காவல் துறையினர், இருசக்கர வாகன திருடர்கள் இம்தியாஸ், முகமது சாதிக் ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வசமாய் மாட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளி; சேஸ் செய்துபிடித்த போலீஸ்

சென்னை: ஆந்திர மாநிலம் கஜல மண்டியம் காவல் துறையினர் ஆந்திராவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் என்பது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி ஆந்திராவில் விற்று வருவது தெரியவந்தது. இந்த திருட்டுக்கு கூட்டாளியாக இருந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது சாதிக் என்பவரையும் ஆந்திரா கஜல மண்டியம் காவல் துறையினர் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருட்டு நடந்த இடம் சென்னை கொடுங்கையூரில் இருப்பதால் ஆந்திர காவல் துறையினர் கொடுங்கையூர் காவல் துறையினருக்கு் தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஆந்திரா சென்ற கொடுங்கையூர் காவல் துறையினர், இருசக்கர வாகன திருடர்கள் இம்தியாஸ், முகமது சாதிக் ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வசமாய் மாட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளி; சேஸ் செய்துபிடித்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.