ETV Bharat / state

தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் சிக்கி பலி

author img

By

Published : Sep 23, 2020, 5:04 PM IST

சென்னை: தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இளைஞர் மரணம்
இளைஞர் மரணம்

சென்னை பல்லவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (45). இவர் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். அவருடைய மகன் கரண் (18) எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்தார்.

இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) திருநீர்மலை பிராதன சாலையில் இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கனரக லாரி ஒன்று மோதியதில் கரண் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கரண் உயிரிழந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை பல்லவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (45). இவர் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். அவருடைய மகன் கரண் (18) எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்தார்.

இவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 21) திருநீர்மலை பிராதன சாலையில் இரு சக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கனரக லாரி ஒன்று மோதியதில் கரண் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி கரண் உயிரிழந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.