ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு வந்த ஆபத்து - போக்சோவில் இளைஞர் கைது - இண்டாகிராமில் சிறுமிக்கு பலியால் தொல்லை

சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Instagram
Instagram
author img

By

Published : Dec 30, 2019, 1:10 PM IST

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தாயுடன் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

சென்னை மணலியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை மகேஷ் தவறான உறவுக்கு அழைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் கவுசல்யா என்ற பெயரில் மகேஷ் போலியான கணக்கைத் தொடங்கி மீண்டும் மாணவியிடம் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார்.

பெண்தான் என நினைத்து மாணவி அந்தக் கணக்கில் வழக்கம் போல நட்பாகப் பேசியுள்ளார். பெண் போலவே பேசி மாணவியின் அந்தரங்க வீடியோவை வாங்கி அதை செல்போனில் மகேஷ் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து வீடியோவை வைத்துக்கொண்டு தன்னுடைய உண்மையான கணக்கு மூலம் மாணவியிடம் பேசிய மகேஷ், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் உள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகவும் அவர் மிரட்டி உறவுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இந்த விவகாரத்தை தனது தாயிடம் கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடியவருக்குச் சிறை!

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தாயுடன் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

சென்னை மணலியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை மகேஷ் தவறான உறவுக்கு அழைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் கவுசல்யா என்ற பெயரில் மகேஷ் போலியான கணக்கைத் தொடங்கி மீண்டும் மாணவியிடம் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார்.

பெண்தான் என நினைத்து மாணவி அந்தக் கணக்கில் வழக்கம் போல நட்பாகப் பேசியுள்ளார். பெண் போலவே பேசி மாணவியின் அந்தரங்க வீடியோவை வாங்கி அதை செல்போனில் மகேஷ் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து வீடியோவை வைத்துக்கொண்டு தன்னுடைய உண்மையான கணக்கு மூலம் மாணவியிடம் பேசிய மகேஷ், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் உள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகவும் அவர் மிரட்டி உறவுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இந்த விவகாரத்தை தனது தாயிடம் கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடியவருக்குச் சிறை!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.12.19

இண்டாகிராமில் இளம் பெண்ணுக்கு வந்த ஆபத்து, பாலியல் தொந்தரவு கொடுத்த மணலியை சேர்ந்தவர் கைது..

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக மணலியை சேர்ந்த மகேஷ் என்பவர் அறிமுகமாகி உள்ளார். கடந்த 25 ஆம் தேதி காலை 4 மணி முதல் இன்ஸ்டாகிராமில் தன் ஆசைக்கு இணங்குமாறு மகேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அன்றைய தினம் மாலையிலேயே மகேஷ், கவுசல்யா என்ற பெயரில் பொய்யாக மற்றொரு கணக்கினை தொடங்கி அந்த இளம்பெண்ணிடம் அறிமுகமாகி தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் இளம்பெண் குளிக்கும்போது வீடியோ கால் பேசி அதை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர் தன்னுடைய உண்மையான கணக்கு மூலம் பேசிய மகேஷ் தன்னிடம் உள்ள வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, ஆசைக்கு இணங்க வற்புறுதியுள்ளார். இதனால் அந்த இளம்பெண் தனது தாயாரிடம் உண்மையை கூற, அவரது தயார் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மகேஷை கைது செய்த காவல்துறையினர் அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளம்பெண்ணின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

tn_che_08_man_arrested_charging_to_making_harassment_by_Instagram_script_7204894Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.