ETV Bharat / state

திராவிடத்திற்கு எதிரானதா தலித் அரசியல்? - பேராசிரியர் ரகுபதி கூறுவது என்ன?

author img

By

Published : Aug 7, 2023, 10:32 PM IST

Updated : Aug 9, 2023, 7:06 PM IST

எழுத்தாளர், தொகுப்பாசிரியர், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் என்ற பன்முகம் கொண்ட பேராசிரியர் கோ. ரகுபதி ஈடிவி பாரத் நேயர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், புத்தகம் வாசிப்பதன் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும் அவர் திராவிடத்திற்கு எதிரானதா தலித் அரசியல் என்பது குறித்து பதிலுரைத்துள்ளார்.

பேராசிரியர் கோ. ரகுபதி சிறப்பு நேர்காணல்
பேராசிரியர் கோ. ரகுபதி சிறப்பு நேர்காணல்
பேராசிரியர் கோ. ரகுபதி சிறப்பு நேர்காணல்

சென்னை: பேராசிரியர் கோ. ரகுபதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்களின் ஆசிரியரும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினருமாக உள்ளார். இவர் எழுதிய திராவிட மதம் என்ற புத்தகம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது தொடக்கக் கல்வியை தேரிப்பனை நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் பள்ளியிலும் பயின்றார். அதைத் தொடர்ந்து அவர் நாசரேத், பிள்ளையான்மனை மர்காஷிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை, மற்றும் முனைவர் பட்டங் களையும் பெற்றார்.

தமிழில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றில் நிருபராகவும் ஓர் ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். அதற்கு பின் தான் பயின்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கல் மற்றும் உட் கொணர்வு ஆய்வு மையத்தில் இணை ஆராய்ச்சியாளராக இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றினார்.

கடந்த 2011ஆம் முதல் சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி, திண்டிவனம். ஆ. கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது தமிழக அரசு புதிதாக நிறுவியுள்ள "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில்" உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

இவர் தன் ஆய்வுகளின் மூலம், காந்தியின் ஸநாத அரசியல், போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும், காவேரிப் பெருவெள்ளம், தீண்டாமைக்குள் தீண்டாமை, திராவிட மதம், திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள், உள்ளிட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

"திராவிட மதம்" ஆய்வு நூல்களில் கருத்து எந்த புள்ளியில் தொடங்கியது: "பொதுவாக முனைவர் பட்ட ஆராய்ச்சி காலத்தில் இருந்து, ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்த கட்டுரைகள் நூல்கள், இதுவரை நாம் பார்த்திராத புதிய செய்திகள், விஷயங்கள்,கருத்துகளை தேர்ந்தெடுத்து படிப்பது உண்டு. 2015-16 ஆண்டில் அந்த நூலை கண்டெடுத்தன. அந்த புத்தகத்தின் தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருந்தது. உள்ளிருக்கும் பொருளடக்கம் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமானது ஒன்று. அந்த நூலின் ஆசிரியர் அலர்மேன்மங்கை அம்மாள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நூலில் அலர்மேன்மங்கை அவர்களின் வேறு எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் பெயருக்கு முன், சென்னை, பண்டிதை, அவர்களை குறித்து நிறைய தேடியுள்ளேன், ஆனால் எந்த ஒரு தகவல்கள் கிடைக்கவில்லை"

"திராவிட மதம்" - மீள் பதிப்பிற்கான தேவை என்ன: "முதலில் மதம் என்பது மனிதன் கண்டுபிடித்தது ஒன்று தான். உலகம் தோன்றிய காலத்தில் மதம் என்பது கிடையாது. ஒரு மதம் சார்ந்தவர் மாற்ற மதம் சார்ந்தவர்களிடம், பகைமை பாராட்டுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கிறது. சம காலத்தில் மதத்தின் பெயரால் இங்கு அரசியலும், மதத்தின் பெயரால் வன்முறையும் நடைபெறுகிறது. மதங்களின் வரலாற்றை புரிந்து கொள்ள இந்த நூலை மீள் பதிப்பு செய்யப்பட்டுள்ளது".

"திராவிட மதம்” நூல் கடவுளுக்கு எதிரானதா? கடவுளின் பெயரில் மறுக்கப்படும் சமூக நீதிக்காக எதிரானதா?: "திராவிட மதம் நூலின் ஆசிரியர் அலர்மேன்மங்கை அம்மாள் அவர்கள், கடவுள் உருவத்தை சொல்வது இல்லை. நம்மை சுற்றி உயிர் பொருள் ஒன்று இருக்கிறது அதை சக்தி என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை கடவுள் என்று கூறவில்லை. அந்த உயிர் பொருளைக் கண்டறியும் வழி தியானம் என்று எல்லாம் கூறப்படுகிறது. அதை மதம் என்று கூறவில்லை"

சனாதனமும் - திராவிட மதமும்?: "இந்த நூல் முழுவதும், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி விளக்குகிறது. சனாதனம் சார்ந்த நூல்களில் ஒருவரை ஏற்றியும், மற்றவை தாழ்த்தியும் இருக்கும். ஆனால், திராவிடம் என்பது, அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை கொண்டது"

பொதுவுடைமையும் சமூக நீதியும்: "பொதுவுடைமை என்பது அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும், ஒரு மனிதன் அடிப்படை தேவை, மற்றும் அடிப்படை பொருளாதாரம் கிடைக்க வேண்டும், இங்கு ஒரு சார்பினருக்கு எல்லாம் கிடைத்தும், மற்றொரு சார்பினருக்கு ஒன்றுமே இல்லாமல் இருப்பது சமூநீதி இல்லை"

திராவிடமும் தலித் எழுத்து -அரசியல் எதிர் எதிரானதா? "திராவிடம் வார்த்தை அறிமுகம் செய்தவர்கள் ஆதிதிராவிடர்கள் தான், அவர்கள் போராடி, வாங்கி உள்ளார்கள். ஆதி திராவிடர்களிடம் பிரிந்தவர்கள் தான் மற்ற திராவிடர்கள். தற்போது இருக்கும் திராவிட இயக்கங்கள் இருக்கும் முன்னே இங்கு ஆதிதிராவிடர்கள் இயக்கம் தொடங்கி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பல ஊடகங்கள், தலித் பிரச்சினைகளை பேசுவது இல்லை, ஆனால் ஈ.வே.ரா பெரியார் நடத்திய குடியரசு பத்திரிக்கையில், தலித்களை பற்றி அவர் எழுதியுள்ளார் அவர்களுக்கான முன்னுரிமை அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

இன்றைய தலைமுறைகளிடம் வாசிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டபோது, "குறைவாக இருக்கிறது, அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் இருப்பதால், புத்தகம் படிப்பதற்கு பொறுமை இல்லை" என்று தெரிவித்தார் பேராசிரியர், ஆய்வாளர், கோ. ரகுபதி.

இதையும் படிங்க: "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." சின்னக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல்

பேராசிரியர் கோ. ரகுபதி சிறப்பு நேர்காணல்

சென்னை: பேராசிரியர் கோ. ரகுபதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்தவர். இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்களின் ஆசிரியரும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினருமாக உள்ளார். இவர் எழுதிய திராவிட மதம் என்ற புத்தகம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது தொடக்கக் கல்வியை தேரிப்பனை நடுநிலைப் பள்ளியிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் பள்ளியிலும் பயின்றார். அதைத் தொடர்ந்து அவர் நாசரேத், பிள்ளையான்மனை மர்காஷிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை, மற்றும் முனைவர் பட்டங் களையும் பெற்றார்.

தமிழில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றில் நிருபராகவும் ஓர் ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். அதற்கு பின் தான் பயின்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூக விலக்கல் மற்றும் உட் கொணர்வு ஆய்வு மையத்தில் இணை ஆராய்ச்சியாளராக இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றினார்.

கடந்த 2011ஆம் முதல் சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலை, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி, திண்டிவனம். ஆ. கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது தமிழக அரசு புதிதாக நிறுவியுள்ள "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில்" உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

இவர் தன் ஆய்வுகளின் மூலம், காந்தியின் ஸநாத அரசியல், போக்குவரத்து உருவாக்கமும் ஜாதிகளின் உருமாற்றமும், காவேரிப் பெருவெள்ளம், தீண்டாமைக்குள் தீண்டாமை, திராவிட மதம், திராவிடப் பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள், உள்ளிட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

"திராவிட மதம்" ஆய்வு நூல்களில் கருத்து எந்த புள்ளியில் தொடங்கியது: "பொதுவாக முனைவர் பட்ட ஆராய்ச்சி காலத்தில் இருந்து, ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்த கட்டுரைகள் நூல்கள், இதுவரை நாம் பார்த்திராத புதிய செய்திகள், விஷயங்கள்,கருத்துகளை தேர்ந்தெடுத்து படிப்பது உண்டு. 2015-16 ஆண்டில் அந்த நூலை கண்டெடுத்தன. அந்த புத்தகத்தின் தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருந்தது. உள்ளிருக்கும் பொருளடக்கம் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமானது ஒன்று. அந்த நூலின் ஆசிரியர் அலர்மேன்மங்கை அம்மாள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நூலில் அலர்மேன்மங்கை அவர்களின் வேறு எந்த குறிப்பும் இல்லை, அவர்கள் பெயருக்கு முன், சென்னை, பண்டிதை, அவர்களை குறித்து நிறைய தேடியுள்ளேன், ஆனால் எந்த ஒரு தகவல்கள் கிடைக்கவில்லை"

"திராவிட மதம்" - மீள் பதிப்பிற்கான தேவை என்ன: "முதலில் மதம் என்பது மனிதன் கண்டுபிடித்தது ஒன்று தான். உலகம் தோன்றிய காலத்தில் மதம் என்பது கிடையாது. ஒரு மதம் சார்ந்தவர் மாற்ற மதம் சார்ந்தவர்களிடம், பகைமை பாராட்டுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கிறது. சம காலத்தில் மதத்தின் பெயரால் இங்கு அரசியலும், மதத்தின் பெயரால் வன்முறையும் நடைபெறுகிறது. மதங்களின் வரலாற்றை புரிந்து கொள்ள இந்த நூலை மீள் பதிப்பு செய்யப்பட்டுள்ளது".

"திராவிட மதம்” நூல் கடவுளுக்கு எதிரானதா? கடவுளின் பெயரில் மறுக்கப்படும் சமூக நீதிக்காக எதிரானதா?: "திராவிட மதம் நூலின் ஆசிரியர் அலர்மேன்மங்கை அம்மாள் அவர்கள், கடவுள் உருவத்தை சொல்வது இல்லை. நம்மை சுற்றி உயிர் பொருள் ஒன்று இருக்கிறது அதை சக்தி என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதை கடவுள் என்று கூறவில்லை. அந்த உயிர் பொருளைக் கண்டறியும் வழி தியானம் என்று எல்லாம் கூறப்படுகிறது. அதை மதம் என்று கூறவில்லை"

சனாதனமும் - திராவிட மதமும்?: "இந்த நூல் முழுவதும், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் வாழ்க்கை முறையைப் பற்றி விளக்குகிறது. சனாதனம் சார்ந்த நூல்களில் ஒருவரை ஏற்றியும், மற்றவை தாழ்த்தியும் இருக்கும். ஆனால், திராவிடம் என்பது, அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை கொண்டது"

பொதுவுடைமையும் சமூக நீதியும்: "பொதுவுடைமை என்பது அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும், ஒரு மனிதன் அடிப்படை தேவை, மற்றும் அடிப்படை பொருளாதாரம் கிடைக்க வேண்டும், இங்கு ஒரு சார்பினருக்கு எல்லாம் கிடைத்தும், மற்றொரு சார்பினருக்கு ஒன்றுமே இல்லாமல் இருப்பது சமூநீதி இல்லை"

திராவிடமும் தலித் எழுத்து -அரசியல் எதிர் எதிரானதா? "திராவிடம் வார்த்தை அறிமுகம் செய்தவர்கள் ஆதிதிராவிடர்கள் தான், அவர்கள் போராடி, வாங்கி உள்ளார்கள். ஆதி திராவிடர்களிடம் பிரிந்தவர்கள் தான் மற்ற திராவிடர்கள். தற்போது இருக்கும் திராவிட இயக்கங்கள் இருக்கும் முன்னே இங்கு ஆதிதிராவிடர்கள் இயக்கம் தொடங்கி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் பல ஊடகங்கள், தலித் பிரச்சினைகளை பேசுவது இல்லை, ஆனால் ஈ.வே.ரா பெரியார் நடத்திய குடியரசு பத்திரிக்கையில், தலித்களை பற்றி அவர் எழுதியுள்ளார் அவர்களுக்கான முன்னுரிமை அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

இன்றைய தலைமுறைகளிடம் வாசிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டபோது, "குறைவாக இருக்கிறது, அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் இருப்பதால், புத்தகம் படிப்பதற்கு பொறுமை இல்லை" என்று தெரிவித்தார் பேராசிரியர், ஆய்வாளர், கோ. ரகுபதி.

இதையும் படிங்க: "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." சின்னக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல்

Last Updated : Aug 9, 2023, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.