ETV Bharat / state

ஜன. 3ல் தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சி-அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 7:07 PM IST

47th Chennai Book Fair: 47வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியானது தற்போது சென்னை நந்தனத்தில் நடைபெற்று வருகிறது.

work of setting up the halls for the 47th Chennai Book Fair is in progress
47வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: 47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியானது தற்போது சென்னை நந்தனத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஆண்டுத்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதில் எப்போதும் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தான்.

சென்னையில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்தும் இந்த கண்காட்சிக்கு பல்வேறு தரப்பினர் வருகை தந்து, ஆர்வத்தோடு புத்தகத்தை வாங்கிச் செல்வர். மேலும் எழுத்தாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கு இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அனைத்து கிடைக்கும். எனவே, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, லட்சக்கணக்கான மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வருகை புரிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்வர்.

சிறப்பு தள்ளுபடி: இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு பல எதிர்பார்ப்புகளுடன் வருகை புரியும் வாசகர்களுக்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும், எப்போதும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அரங்குகள்: கண்காட்சியில் சுமார் 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கடைகளை அமைக்க உள்ளனர்.

டிக்கெட்: இந்த புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புத்தகக் காட்சி முழுவதும் செல்வதற்கு ரூ.100 செலுத்தி சிறப்பு பாஸ் எடுக்க, பபாசி இணையத்தில் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மேலும், இந்த புத்தக்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, கதை உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபடும். அதேபோல் இந்தாண்டும் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

சிறப்பு நிகழ்ச்சிகள்: புத்தகக் காட்சியின் போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து, வாழ்க்கைக்குத் தேவையான சில தலைப்புகளில் மக்களுடன் உரையாடல்கள் நடைபெறும்.

இதையும் படிங்க: புத்தாண்டு 2024: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்..! பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு..!

சென்னை: 47வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், இதற்கான அரங்குகள் அமைக்கும் பணியானது தற்போது சென்னை நந்தனத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஆண்டுத்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். அதில் எப்போதும் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி தான்.

சென்னையில் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இருந்தும் இந்த கண்காட்சிக்கு பல்வேறு தரப்பினர் வருகை தந்து, ஆர்வத்தோடு புத்தகத்தை வாங்கிச் செல்வர். மேலும் எழுத்தாளர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கு இந்த கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்தாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்தப் புத்தகக் கண்காட்சியில் பல தரப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அனைத்து கிடைக்கும். எனவே, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, லட்சக்கணக்கான மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் வருகை புரிந்து, ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி செல்வர்.

சிறப்பு தள்ளுபடி: இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு பல எதிர்பார்ப்புகளுடன் வருகை புரியும் வாசகர்களுக்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும், எப்போதும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

அரங்குகள்: கண்காட்சியில் சுமார் 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கடைகளை அமைக்க உள்ளனர்.

டிக்கெட்: இந்த புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த புத்தகக் காட்சி முழுவதும் செல்வதற்கு ரூ.100 செலுத்தி சிறப்பு பாஸ் எடுக்க, பபாசி இணையத்தில் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மேலும், இந்த புத்தக்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, கதை உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கபடும். அதேபோல் இந்தாண்டும் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.

சிறப்பு நிகழ்ச்சிகள்: புத்தகக் காட்சியின் போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து, வாழ்க்கைக்குத் தேவையான சில தலைப்புகளில் மக்களுடன் உரையாடல்கள் நடைபெறும்.

இதையும் படிங்க: புத்தாண்டு 2024: பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்..! பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.