சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 94 வீடுகளுக்கு கழிவுநீர் அகற்று இணைப்பு வழங்குவதற்கான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு இணைப்புத் தருமாறு அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.
அவர்கள் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரிடம்தான் இது தொடர்பான கோப்பு உள்ளது. அவர் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்றால் ஒரு லட்சம் பணம் கையூட்டு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விஜயகுமாரின் அலுவலகத்திற்கு சென்று முன்பணமாக ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதுபோல பொறிவைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.