ETV Bharat / state

தொழிலதிபர் கொலை வழக்கு பெண் வழக்கறிஞர் கைது!

author img

By

Published : Aug 8, 2019, 1:40 PM IST

சென்னை: அடையாறு தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருந்த பெண் வழக்கறிஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண் வழக்கறிஞர்

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ். திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவர் திடீரென கடந்த ஜூன் மாதம் காணாமல்போனதால், அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். சுரேஷ் பரத்வாஜின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்தபோது, காணாமல்போவதற்கு முன்பு காசிமேட்டைச் சேர்ந்த ரவுடிகளையும், பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரபல ரவுடிகளான குடுமி பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ், வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவருக்கு 60 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பரத்வாஜ் திரும்பக் கேட்டதால் அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்து உடலை கடலில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

பெண் வழக்கறிஞர்  ப்ரீத்தா
பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா

இந்த வழக்கில் உடந்தையாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்த காவல் துறை தலைமறைவாக இருந்த பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ப்ரீத்தாவை இன்று அடையாறு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ். திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவர் திடீரென கடந்த ஜூன் மாதம் காணாமல்போனதால், அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். சுரேஷ் பரத்வாஜின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்தபோது, காணாமல்போவதற்கு முன்பு காசிமேட்டைச் சேர்ந்த ரவுடிகளையும், பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரபல ரவுடிகளான குடுமி பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ், வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவருக்கு 60 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பரத்வாஜ் திரும்பக் கேட்டதால் அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்து உடலை கடலில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

பெண் வழக்கறிஞர்  ப்ரீத்தா
பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா

இந்த வழக்கில் உடந்தையாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்த காவல் துறை தலைமறைவாக இருந்த பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ப்ரீத்தாவை இன்று அடையாறு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Intro:சென்னை அடையாறில் தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைதுBody:சென்னை அடையாறில் தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா கைது

காசிமேடு பகுதியில் கடலில் கல்லை கட்டி வீசப்பட்ட தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜின் உடலை போலீசார் தேடி வந்த நிலையில் போலீசாரால் கொலை செய்த கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் பிரித்தாள் கைது செய்யப்பட்டார் இதுகுறித்து அடையாறு காவல்துறை அவரிடம் விசாரணை செய்து வருகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.