ETV Bharat / state

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

author img

By

Published : Jun 10, 2021, 8:08 AM IST

ஆவடி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்தபோது மின்மோட்டார் வயரில் கை பட்டு சுகாதார ஊழியராகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதி ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர், ஜெகன்குமார் (40). இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பைரவி(34). பைரவி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜுன்.9) பைரவி வீட்டு முன்பு, மின்மோட்டார் அருகில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை மின்மோட்டார் வயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த பைரவியின் குடும்பத்தினர், அவரை மீட்டு அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஷேர்சாட் தோழியுடன் மாயமான இளம்பெண்? பெற்றோர் புகார்

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதி ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர், ஜெகன்குமார் (40). இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பைரவி(34). பைரவி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வார்டு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜுன்.9) பைரவி வீட்டு முன்பு, மின்மோட்டார் அருகில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை மின்மோட்டார் வயரில் பட்டு மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த பைரவியின் குடும்பத்தினர், அவரை மீட்டு அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பைரவி.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஷேர்சாட் தோழியுடன் மாயமான இளம்பெண்? பெற்றோர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.