ETV Bharat / state

மேம்பால தடுப்புச் சுவரின் மீது இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 22, 2020, 6:40 PM IST

சென்னை: பெரம்பூர் மேம்பால தடுப்புச் சுவரின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்த தம்பதி பாலாஜி (52) உஷா (48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பாலாஜி விமான நிலைய சுங்கவரித் துறையில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று (அக்.22) மதியம் பாலாஜி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஜமாலியாவில் இருந்து பெரம்பூர் நோக்கிச் சென்றார். அப்போது
பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்தின் மீது வேகமாக செல்லும் போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைதடுமாறி கணவன், மனைவி இருவரும் பாலத்திலிருந்து 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் எற்பட்டு உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் உயிருக்கு போராடி வந்த பாலாஜியை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பாலாஜியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்த தம்பதி பாலாஜி (52) உஷா (48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பாலாஜி விமான நிலைய சுங்கவரித் துறையில் ஹவில்தாராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று (அக்.22) மதியம் பாலாஜி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஜமாலியாவில் இருந்து பெரம்பூர் நோக்கிச் சென்றார். அப்போது
பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்தின் மீது வேகமாக செல்லும் போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிலைதடுமாறி கணவன், மனைவி இருவரும் பாலத்திலிருந்து 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் எற்பட்டு உஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் உயிருக்கு போராடி வந்த பாலாஜியை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பாலாஜியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.