ETV Bharat / state

2 மாதங்களில் கிரானைட் குவாரிகள் ஏலம் : சிவி சண்முகம்!

author img

By

Published : Jul 11, 2019, 7:28 PM IST

சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் இரண்டு மாதங்களில் ஏலம் விடப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

auction

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த உத்தரவின் பேரில்தான் தமிழ்நாட்டில் 1,099 குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான்.

அவற்றை திறக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மூலம் உரிமையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஏலம் விடப்படும். சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த உத்தரவின் பேரில்தான் தமிழ்நாட்டில் 1,099 குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இந்த நிலைதான்.

அவற்றை திறக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மூலம் உரிமையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ஏலம் விடப்படும். சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

Intro:Body:
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இன்னும் இரு மாதத்தில் ஏலம் விடப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன் மானியக்கோரிக்கை விவாதத்தின்போது, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கிரானைட் குவாரிகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த உத்தரவின் பேரில்தான் தமிழகத்தில் 1099 குவாரிகள் மூடப்படுவதாகவும், இந்தியா முழுவதும் இதே நிலை தான் என்றார். மேலும், அவற்றை திறக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு மூலம் உரிமையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மூடப்பட்டுள்ள கிரானைட் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறது. இன்னும் இரு மாதத்தில் ஏலம் வரும் என்றார். மேலும், சுரங்களுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும், தாதுமணல் எடுப்பதற்கு உரிமம் பெற்றவர்களிடம் விளக்கம் கேட்டு அரசு தரப்பில் நோடிஸ் அனுப்பியுள்ளது என்றும். தணியார் யாரும் தாதுமணல் எடுப்பதற்கு அனுமதி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.