ETV Bharat / state

"இனி நடக்காம பார்த்துக்கொள்கிறோம்" தேசிய விளையாட்டு விவகாரத்தில் உதயநிதி விளக்கம்!

author img

By

Published : Jun 11, 2023, 9:52 AM IST

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது தகவல் பரிமாற்ற குழப்பத்தால் நடந்து விட்டது. இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது குறித்து உதயநிதி சொல்வது என்ன?
தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது குறித்து உதயநிதி சொல்வது என்ன?

சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில் மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.பேருந்துகள் நின்று செல்வதற்கு இடம் மட்டுமே இருந்த நிலையில் நிழற்குடையுடன் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணா சதுக்க பேருந்து நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க முடிவு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் இனி வெயில் மழைக்காலங்களில் பயணிகள் சிரமம் மின்றி பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும், மேலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைத்தார்.

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும்.” என உறுதியளித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர் அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்டக்டர் அவதாரமெடுக்கும் சித்தராமையா! பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைக்கிறார்...

சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகில் அண்ணா சதுக்கத்தில் 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள அண்ணா சதுக்க பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் திறந்த வெளியில் இருந்ததால் வெயில் மழை காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.பேருந்துகள் நின்று செல்வதற்கு இடம் மட்டுமே இருந்த நிலையில் நிழற்குடையுடன் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணா சதுக்க பேருந்து நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க முடிவு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் இனி வெயில் மழைக்காலங்களில் பயணிகள் சிரமம் மின்றி பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும், மேலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் திறந்து வைத்தார்.

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”தீவிர விசாரணை செய்த பின் தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும்.” என உறுதியளித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. காணொலி மூலமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர் அதன் பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கண்டக்டர் அவதாரமெடுக்கும் சித்தராமையா! பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை தொடங்கி வைக்கிறார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.