ETV Bharat / state

பத்து ஆண்டு கால அரசின் தோல்வியைப் பறைசாற்றும் ஆளுநர் உரை - வைகோ அறிக்கை

author img

By

Published : Feb 2, 2021, 5:42 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (பிப்.1) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை பத்து ஆண்டுகால தமிழ்நாடு அரசின் தோல்வியை பறைசாற்றுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ கருத்து
வைகோ கருத்து

சென்னை: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆற்றிய இந்த உரை பத்தாண்டு கால தமிழ்நாடு அரசின் தோல்வியை பறைசாற்றுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையைத் தொடங்கும் போது, 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு இருக்கும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.க.வினர் கேள்வி எழுப்புவது ஜனநாயக உரிமை. அதற்கு ஆளுநரே தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பார்த்து “வெளிநடப்பு செய்து விட்டுப் போய்விடுங்கள்” என்று கூறியது மரபை மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறி தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசுக்குச் சேவகம் செய்யும் வகையில் மாற்றவும் முனைந்து வருவது கண்டனத்துக்கு உரியது.

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் என முதல்வருக்குக் ‘காவிரி காப்பாளன்’ என்று பட்டம் சூட்டி ஆளுநர் மகிழ்ந்திருக்கிறார். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிய உரிமங்கள் வழங்கி இருப்பதை அ.இ.அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இரட்டை வேடம் போடுகிறது என்பதே உண்மை நிலை ஆகும்.

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை குறித்து உறுதியான கருத்தை முன்வைக்காமல், இருமொழித் திட்டம் தொடரும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது கண்துடைப்பாகும். கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டு கிடக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கு அ.இ.அ.தி.மு.க. அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை என்பது ஆளுநர் உரையில் தெரிகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறாமல் தமிழ்நாடு மாணவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை இழக்கச் செய்து வரும் அ.இ.அ.தி.மு.க., அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியதை ஆளுநர் பாராட்டுவதை ஏற்க முடியாது. அதைப் போன்றே மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ள மத்திய அரசுக்கு ஆளுநர் உரையில் கோரிக்கை கூட இடம் பெறவில்லை.

புரெவி, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பாரபட்சம் இல்லாமல் முழுமையான உதவித் தொகை வழங்கவும் உறுதி கூறப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வேலை இழப்புக்கு ஆளான இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

காவிரி-குண்டாறு இணைப்பு, அவிநாசி-அத்திக்கடவு போன்ற திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு இருப்பதை மீண்டும் முலாம் பூசி ஆளுநர் உரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்பது ஆளுநர் உரை மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. மொத்தத்தில் பத்து ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க. அரசின் தோல்வியைத் தான் ஆளுநர் உரை பறைசாற்றுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் மட்டுமே!

சென்னை: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆற்றிய இந்த உரை பத்தாண்டு கால தமிழ்நாடு அரசின் தோல்வியை பறைசாற்றுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையைத் தொடங்கும் போது, 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு இருக்கும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.க.வினர் கேள்வி எழுப்புவது ஜனநாயக உரிமை. அதற்கு ஆளுநரே தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பார்த்து “வெளிநடப்பு செய்து விட்டுப் போய்விடுங்கள்” என்று கூறியது மரபை மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறி தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசுக்குச் சேவகம் செய்யும் வகையில் மாற்றவும் முனைந்து வருவது கண்டனத்துக்கு உரியது.

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் என முதல்வருக்குக் ‘காவிரி காப்பாளன்’ என்று பட்டம் சூட்டி ஆளுநர் மகிழ்ந்திருக்கிறார். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிய உரிமங்கள் வழங்கி இருப்பதை அ.இ.அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இரட்டை வேடம் போடுகிறது என்பதே உண்மை நிலை ஆகும்.

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கை குறித்து உறுதியான கருத்தை முன்வைக்காமல், இருமொழித் திட்டம் தொடரும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது கண்துடைப்பாகும். கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டு கிடக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கு அ.இ.அ.தி.மு.க. அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை என்பது ஆளுநர் உரையில் தெரிகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறாமல் தமிழ்நாடு மாணவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை இழக்கச் செய்து வரும் அ.இ.அ.தி.மு.க., அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியதை ஆளுநர் பாராட்டுவதை ஏற்க முடியாது. அதைப் போன்றே மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ள மத்திய அரசுக்கு ஆளுநர் உரையில் கோரிக்கை கூட இடம் பெறவில்லை.

புரெவி, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பாரபட்சம் இல்லாமல் முழுமையான உதவித் தொகை வழங்கவும் உறுதி கூறப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வேலை இழப்புக்கு ஆளான இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

காவிரி-குண்டாறு இணைப்பு, அவிநாசி-அத்திக்கடவு போன்ற திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு இருப்பதை மீண்டும் முலாம் பூசி ஆளுநர் உரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்பது ஆளுநர் உரை மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. மொத்தத்தில் பத்து ஆண்டு கால அ.இ.அ.தி.மு.க. அரசின் தோல்வியைத் தான் ஆளுநர் உரை பறைசாற்றுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் மட்டுமே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.