ETV Bharat / state

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் மீது மேலும் 2 மாணவிகள் புகார்! - பாலியல் வழக்கு

சென்னை: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறையிலுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும், இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளதால் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பாலியல் வழக்கில் கைதான பேராசிரியர் மீது மேலும் 2 மாணவிகள் புகார்
பாலியல் வழக்கில் கைதான பேராசிரியர் மீது மேலும் 2 மாணவிகள் புகார்
author img

By

Published : May 28, 2021, 2:26 PM IST

Updated : May 28, 2021, 3:53 PM IST

சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் பிற ஆசிரியர்களுக்கும் தொடர்பிருப்பதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அப்பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோரை வரவழைத்த காவல் துறையினர், இரண்டு நாள்களாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, மாணவிகள் பாலியல் புகாரளிக்க பிரேத்யேகமாக செல்போன் எண் ஒன்றை வழங்கினார். அதில், பல கல்லூரி, பள்ளி, மாணவிகள் பாலியல் புகார் அளித்திருந்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அதனை வீடியோ பதிவாகவும் எடுத்தனர். இந்த வீடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் வந்து கொண்டிருப்பதால் அசோக் நகர் காவல் துறையினர் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து இன்று (மே 28) அல்லது திங்கட்கிழமை (மே 31) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் பிற ஆசிரியர்களுக்கும் தொடர்பிருப்பதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அப்பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோரை வரவழைத்த காவல் துறையினர், இரண்டு நாள்களாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, மாணவிகள் பாலியல் புகாரளிக்க பிரேத்யேகமாக செல்போன் எண் ஒன்றை வழங்கினார். அதில், பல கல்லூரி, பள்ளி, மாணவிகள் பாலியல் புகார் அளித்திருந்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு மாணவிகள் பாலியல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகளிடம் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி, அதனை வீடியோ பதிவாகவும் எடுத்தனர். இந்த வீடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் வந்து கொண்டிருப்பதால் அசோக் நகர் காவல் துறையினர் அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து இன்று (மே 28) அல்லது திங்கட்கிழமை (மே 31) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Last Updated : May 28, 2021, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.