ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா - எண்ணிக்கை 9ஆக உயர்வு!

author img

By

Published : Mar 22, 2020, 10:36 PM IST

Updated : Mar 22, 2020, 11:02 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

Corona
Corona

கரோனா வைரஸால் மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவிலிருந்து சென்னை திரும்பிய 64 வயது மூதாட்டிக்கும், துபாயிலிருந்து நெல்லை திரும்பிய 43 வயது நபருக்கும் கரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மூதாட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 43 வயது நபர் நெல்லை மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கரோனா வைரஸால் மேலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவிலிருந்து சென்னை திரும்பிய 64 வயது மூதாட்டிக்கும், துபாயிலிருந்து நெல்லை திரும்பிய 43 வயது நபருக்கும் கரோனா வைரஸ் நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மூதாட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், 43 வயது நபர் நெல்லை மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Last Updated : Mar 22, 2020, 11:02 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.