ETV Bharat / state

செல்போன் திருட்டு: சிறுவன் உள்பட இருவர் கைது

author img

By

Published : Jun 13, 2020, 6:19 PM IST

சென்னை: தாம்பரம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

two men arrested for stealing phone in Tambaram Chennai
two men arrested for stealing phone in Tambaram Chennai

சென்னை, தாம்பரத்தை அடுத்த சோமமங்கலம் காட்டாரபாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமோ (35) என்பவர் தங்கி வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சோமமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(19), கார்த்தி(17) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சதீஷை சைதாப்பேட்டை சிறையிலும், கார்த்திக்கை செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க... குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

சென்னை, தாம்பரத்தை அடுத்த சோமமங்கலம் காட்டாரபாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமோ (35) என்பவர் தங்கி வேலை பார்த்துவருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சோமமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(19), கார்த்தி(17) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சதீஷை சைதாப்பேட்டை சிறையிலும், கார்த்திக்கை செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க... குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.