ETV Bharat / state

188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவர் கைது!

author img

By

Published : Oct 25, 2019, 8:23 AM IST

சென்னை: ஆந்திரப்பிரதேசம் பகுதியிலிருந்து 188 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இரண்டு இளைஞர்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Ganja arrest

ஆந்திராவிலிருந்து இரண்டு பேர் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை சோழவரம் அடுத்த விஜய நல்லூர் சுங்கச் சாவடியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசிவா, முரளி ஆகிய இருவர் தாங்கள் வந்த காரில் 188 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Ganja arrest
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 188 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஒடிசா பகுதியிலிருந்து கடத்திக் கொண்டு வந்து சென்னையில் உள்ள நபரிடம் ஒப்படைக்க வந்ததாகத் தெரிவித்தனர் .

மேலும், இந்த கஞ்சா கடத்தலில் முக்கிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் மூலமாகவே பல பகுதிகளுக்கு கஞ்சாவை கடத்திச் செல்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்!

ஆந்திராவிலிருந்து இரண்டு பேர் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை சோழவரம் அடுத்த விஜய நல்லூர் சுங்கச் சாவடியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசிவா, முரளி ஆகிய இருவர் தாங்கள் வந்த காரில் 188 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

Ganja arrest
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 188 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஒடிசா பகுதியிலிருந்து கடத்திக் கொண்டு வந்து சென்னையில் உள்ள நபரிடம் ஒப்படைக்க வந்ததாகத் தெரிவித்தனர் .

மேலும், இந்த கஞ்சா கடத்தலில் முக்கிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் மூலமாகவே பல பகுதிகளுக்கு கஞ்சாவை கடத்திச் செல்கின்றனர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்!

Intro:Body:ஆந்திர பிரதேசத்தில் இருந்து காரில் கடத்தி வந்த 188 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலிசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்..

ஆந்திர பிரேதசத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை சோழவரம் அடுத்த விஜய நல்லூர் சுங்க சாவடியில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலிசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தவறான பதிவு எண்களை கொண்ட காரை போலிசார் நிறுத்தி சோதனை செய்யும் போது 188கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் அதனை கொண்டு வந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராமசிவா (26),முரளி இருவரையும் போலிசார் கைது செய்தனர்.பின்னர் விசாரணையில் ஒரிசா பகுதியில் இருந்து கொண்டு வந்ததாகவும்,சென்னையில் உள்ள நபரிடம் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த கஞ்சா கடத்தலுக்கு பின்னால் ஒரு நபர் இருப்பதாகவும் இதே போல் பல இடங்களில் கஞ்சா கடத்தி செல்வதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.