ETV Bharat / state

கடன் செயலிகள் நடத்தி தகவல்கள் திருட்டு... சீனர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!

author img

By

Published : Jan 2, 2021, 9:25 PM IST

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு கடன் செயலிகளை (loan app) நடத்திவந்த இரண்டு சீனர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை
சென்னை

சென்னை வேங்கை வாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பணத்தேவை காரணமாக எம் ரூபி (MRupee) என்ற லோன் ஆப்பை கூகுள் ஃப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து, ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1500 வட்டியாக பிடித்துக்கொண்டு 3500 மட்டும் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். சில தவணைகள் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார்.

தகவல்கள் திருட்டு

பின்னர் இந்தக் கடனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது, அதனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது என கணேசன் 40 லோன் ஆப்பில் கடன் வாங்கி பணம் கட்ட முடியாத திண்டாடி உள்ளார். இதனால் லோன் ஆப் கால் சென்டரில் இருந்து தொடர்ச்சியாக இவருக்கு ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது தகவல்களையும் திருடி நெருங்கிய நண்பர்களிடமும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை குறித்து விளக்கும் காவல்துறையினர்

இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மிரட்டல் வந்த மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்தபோது, அவற்றில் பெரும்பாலான மொபைல் எண்கள் பெங்களூரில் உள்ள True Kindle Technology Pvt.Ltd. என்ற ஒரே கால் சென்டரில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவலர்கள், 110 நபர்களை ஊழியர்களாக வைத்து கால் சென்டரை நடத்திவந்த பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகிய இருவரை கடந்த 31ஆம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்கள், 20 செல்போன்களை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சீனா, க்வாண்டாங் பகுதியை சேர்ந்த சியா யமோவ், யூ யுவ்ன்லூன் ஆகிய இருவரும் சீனாவிலிருந்து பெங்களூரில் தங்கி இந்த லோன் ஆப்களுக்கு முதலீடு செய்து அதனை நடத்திவருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் பல மாதங்களாக தங்கி இருந்து, லோன் ஆப்கள் நிறுவனம் நடத்திவந்துள்ளனர்.

வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...

இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் க்ரைம் காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீனாவை சேர்ந்த ஹாங்க் (hong) என்பவர் இந்தியாவில் இதுபோன்று பல லோன் ஆப் பெயர்களில் ஆன்லைன் லோன் ஆப்கள் நடத்திவருகிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த இரண்டு நபர்களுமே ஹாங்கின் ஒரு நிறுவன மேலாளர்கள் என்பது தெரியவந்தது. லோன் ஆப் கால் சென்டரில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாடிக்கையாளர்களை சேர்க்கவேண்டும் எனவும், அதேபோல வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த தாமதம் ஆகினால், வாடிக்கையாளர்களுடைய மொபைல்களை ஹேக் செய்து தகவல்களை திருடுவதற்கும், அதன் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டுவதற்கும் தனித்தனியாக ஊழியர்களை நியமித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பணங்களை பல்வேறு வங்கி கணக்கிலிருந்து அவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பபடுவதும் தெரியவந்தது.

அதேபோல் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்துக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வங்கி கணக்கிலிருந்த ரூபாய் 2.50 கோடி பணத்தை சைபர் க்ரைம் காவலர்கள் முடக்கம் செய்துள்ளனர்.

True kindle technology pvt ltd நிறுவனத்தின் லோன் ஆப்களை வடமாநிலத்தை சேர்ந்த நூத்தன் ராம் என்பவர் வடிவமைத்துள்ளார் அவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹாங்க், பெங்களூரில் மட்டும்தான் true kindle technology pvt ltd நிறுவனம் நடத்தி லோன் ஆப்களை செயல்படுத்தி வந்தாரா அல்லது இந்தியாவில் எங்கெல்லாம் இவர் லோன் ஆப் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறித்தும், சீனாவிலிருந்து வேறு என்னென்ன ஆப்கள் தடையை மீறி இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து சைபர் க்ரைம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர பணத்தேவைக்காக விதிமுறைகளை முழுவதுமாக படிக்காமல் இதுபோன்ற லோன் ஆப்களை பயன்படுத்தி கடன்பெற்றால், நமது தகவல்கள் திருடப்படும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓவர் டார்ச்சர்! செல்போன் செயலியில் கடன் பெற்ற இளம்பெண் உயிரிழப்பு

சென்னை வேங்கை வாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பணத்தேவை காரணமாக எம் ரூபி (MRupee) என்ற லோன் ஆப்பை கூகுள் ஃப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து, ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1500 வட்டியாக பிடித்துக்கொண்டு 3500 மட்டும் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். சில தவணைகள் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார்.

தகவல்கள் திருட்டு

பின்னர் இந்தக் கடனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது, அதனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது என கணேசன் 40 லோன் ஆப்பில் கடன் வாங்கி பணம் கட்ட முடியாத திண்டாடி உள்ளார். இதனால் லோன் ஆப் கால் சென்டரில் இருந்து தொடர்ச்சியாக இவருக்கு ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது தகவல்களையும் திருடி நெருங்கிய நண்பர்களிடமும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை குறித்து விளக்கும் காவல்துறையினர்

இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மிரட்டல் வந்த மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்தபோது, அவற்றில் பெரும்பாலான மொபைல் எண்கள் பெங்களூரில் உள்ள True Kindle Technology Pvt.Ltd. என்ற ஒரே கால் சென்டரில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவலர்கள், 110 நபர்களை ஊழியர்களாக வைத்து கால் சென்டரை நடத்திவந்த பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகிய இருவரை கடந்த 31ஆம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்கள், 20 செல்போன்களை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சீனா, க்வாண்டாங் பகுதியை சேர்ந்த சியா யமோவ், யூ யுவ்ன்லூன் ஆகிய இருவரும் சீனாவிலிருந்து பெங்களூரில் தங்கி இந்த லோன் ஆப்களுக்கு முதலீடு செய்து அதனை நடத்திவருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் பல மாதங்களாக தங்கி இருந்து, லோன் ஆப்கள் நிறுவனம் நடத்திவந்துள்ளனர்.

வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...

இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் க்ரைம் காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீனாவை சேர்ந்த ஹாங்க் (hong) என்பவர் இந்தியாவில் இதுபோன்று பல லோன் ஆப் பெயர்களில் ஆன்லைன் லோன் ஆப்கள் நடத்திவருகிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த இரண்டு நபர்களுமே ஹாங்கின் ஒரு நிறுவன மேலாளர்கள் என்பது தெரியவந்தது. லோன் ஆப் கால் சென்டரில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாடிக்கையாளர்களை சேர்க்கவேண்டும் எனவும், அதேபோல வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த தாமதம் ஆகினால், வாடிக்கையாளர்களுடைய மொபைல்களை ஹேக் செய்து தகவல்களை திருடுவதற்கும், அதன் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டுவதற்கும் தனித்தனியாக ஊழியர்களை நியமித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பணங்களை பல்வேறு வங்கி கணக்கிலிருந்து அவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பபடுவதும் தெரியவந்தது.

அதேபோல் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்துக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வங்கி கணக்கிலிருந்த ரூபாய் 2.50 கோடி பணத்தை சைபர் க்ரைம் காவலர்கள் முடக்கம் செய்துள்ளனர்.

True kindle technology pvt ltd நிறுவனத்தின் லோன் ஆப்களை வடமாநிலத்தை சேர்ந்த நூத்தன் ராம் என்பவர் வடிவமைத்துள்ளார் அவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹாங்க், பெங்களூரில் மட்டும்தான் true kindle technology pvt ltd நிறுவனம் நடத்தி லோன் ஆப்களை செயல்படுத்தி வந்தாரா அல்லது இந்தியாவில் எங்கெல்லாம் இவர் லோன் ஆப் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறித்தும், சீனாவிலிருந்து வேறு என்னென்ன ஆப்கள் தடையை மீறி இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து சைபர் க்ரைம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர பணத்தேவைக்காக விதிமுறைகளை முழுவதுமாக படிக்காமல் இதுபோன்ற லோன் ஆப்களை பயன்படுத்தி கடன்பெற்றால், நமது தகவல்கள் திருடப்படும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓவர் டார்ச்சர்! செல்போன் செயலியில் கடன் பெற்ற இளம்பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.