ETV Bharat / state

காரை சேஸ் செய்த காவல் துறை - போதைப் பொருள் சப்ளை செய்தவர்கள் கைது

author img

By

Published : Jul 24, 2021, 11:28 AM IST

சென்னையில் சினிமா பட பாணியில் இரண்டு கார்களில் சென்ற போதைப் பொருள் கடத்தல்காரர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.

போதைப் பொருள் சப்ளை செய்தவர்கள் கைது
போதைப் பொருள் சப்ளை செய்தவர்கள் கைது

சென்னை: புறநகர் பகுதிகளில் தடை செய்யபட்ட ஹெராயின் போதைப் பொருளை கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் ரவி, ப்ரமிளா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து சிட்லபாக்கம், சேலையூரில் பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது சிட்லபாக்கத்தில் ஒருவர் தனது கூட்டாளி ஒருவரிடம் ஹெராயின் விநியோகம் செய்வது தெரியவந்து. அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது

ஆனால், இருவரும் தனித்தனி சொகுசு காரில் தப்பி சென்றார். இதனையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், கூட்டாளியின் காரை மடக்கிப் பிடித்து அதிலிருந்து 350 கிலோ தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

இதனிடையே வேளச்சேரி சாலை வழியாக சொகுசு காரில் அதிவேகத்தில் தப்பிச் சென்ற முக்கிய நபரை மற்றொரு குழு காரில் விரட்டிச் சென்றபோது வெள்ளைகல் அருகே சாலையோர சுவற்றில் கடத்தல் நபர் ஓட்டிவந்த கார் மோதி நின்றது.

பின்னர் கண்ணாடிகளை மூடி கொண்டு கீழே இறங்காமல் இருந்ததால் பின்னல் வந்த காவல் துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து அவரையும் கைது செய்தனர். சினிமா பாணியில் பட்டபகலில் போதைபொருள் கடத்தல் ஆசாமியை காரில் விரட்டிச் சென்ற காட்சி வேளச்சேரி சாலையிலிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிர விசாரணை

அவர்களிடமிருந்து 350 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த நிலையில் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்த காவல் துறையினர் பெசன்ட்நகரிலுள்ள மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பல கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த இந்த கும்பலை ஏற்கனவே காவல் துறையினர் ஆறு மாதம் முன்பு இதேபோல் கைது செய்த நிலையில், அவர்கள் மீண்டும் விற்பனையில் ஈடுபட்டதால் மீண்டும் காவல் துறையினரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா திரும்ப பணம் இல்லை- கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை: புறநகர் பகுதிகளில் தடை செய்யபட்ட ஹெராயின் போதைப் பொருளை கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் ரவி, ப்ரமிளா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து சிட்லபாக்கம், சேலையூரில் பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது சிட்லபாக்கத்தில் ஒருவர் தனது கூட்டாளி ஒருவரிடம் ஹெராயின் விநியோகம் செய்வது தெரியவந்து. அவரை காவல் துறையினர் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கைது

ஆனால், இருவரும் தனித்தனி சொகுசு காரில் தப்பி சென்றார். இதனையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், கூட்டாளியின் காரை மடக்கிப் பிடித்து அதிலிருந்து 350 கிலோ தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

இதனிடையே வேளச்சேரி சாலை வழியாக சொகுசு காரில் அதிவேகத்தில் தப்பிச் சென்ற முக்கிய நபரை மற்றொரு குழு காரில் விரட்டிச் சென்றபோது வெள்ளைகல் அருகே சாலையோர சுவற்றில் கடத்தல் நபர் ஓட்டிவந்த கார் மோதி நின்றது.

பின்னர் கண்ணாடிகளை மூடி கொண்டு கீழே இறங்காமல் இருந்ததால் பின்னல் வந்த காவல் துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து அவரையும் கைது செய்தனர். சினிமா பாணியில் பட்டபகலில் போதைபொருள் கடத்தல் ஆசாமியை காரில் விரட்டிச் சென்ற காட்சி வேளச்சேரி சாலையிலிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீவிர விசாரணை

அவர்களிடமிருந்து 350 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த நிலையில் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இருவரையும் கைது செய்த காவல் துறையினர் பெசன்ட்நகரிலுள்ள மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து பல கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த இந்த கும்பலை ஏற்கனவே காவல் துறையினர் ஆறு மாதம் முன்பு இதேபோல் கைது செய்த நிலையில், அவர்கள் மீண்டும் விற்பனையில் ஈடுபட்டதால் மீண்டும் காவல் துறையினரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா திரும்ப பணம் இல்லை- கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.