ETV Bharat / state

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Apr 5, 2021, 6:22 PM IST

சென்னை: துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறை அலுவலர்கள், இருவரை கைது செய்தனர்.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று (ஏப்.5) காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுபர் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகிய இரு பயணிகள் மீதும் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்களது உள்ளாடைகளுக்குள் 255 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக-அதிமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குத் துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று (ஏப்.5) காலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுபர் அலி (32), முகமது ஜபீர் (24) ஆகிய இரு பயணிகள் மீதும் சந்தேகமடைந்த அலுவலர்கள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்களது உள்ளாடைகளுக்குள் 255 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக-அதிமுக பிரமுகர்களிடம் ரூ.6 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.