ETV Bharat / state

ரயில் பயணிகளிடம் வழிப்பறி செய்துவந்த மூன்று பேர் கைது!

author img

By

Published : Nov 3, 2019, 9:26 AM IST

Updated : Nov 3, 2019, 12:48 PM IST

சென்னை: ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்த மூன்று பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

robbers

சென்னையில் சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தொடர்ந்து, தனியாக வரும் பயணிகளிடம் இருந்து செயின் பறிப்புகள் நடைபெருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில், ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய வடகோடியில், சந்தேகதிற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21) என்பதும், ரயில் பயணிகளிடம் தொடர்ந்து, பணம், தங்க நகைகள், செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துவந்ததும் தெரியவந்தது.

robbers
வழிப்பறி கொள்ளையன் ஆகாஷ்

இவரது கூட்டாளிகளான வினோத்(21), செல்வம்(21) ஆகியோரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஏழரை சவரன் நகைகளையும், 8 செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்த பின்னர் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

சென்னையில் சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தொடர்ந்து, தனியாக வரும் பயணிகளிடம் இருந்து செயின் பறிப்புகள் நடைபெருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில், ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பேசின் பிரிட்ஜ் ரயில் நிலைய வடகோடியில், சந்தேகதிற்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21) என்பதும், ரயில் பயணிகளிடம் தொடர்ந்து, பணம், தங்க நகைகள், செல்ஃபோன்கள் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துவந்ததும் தெரியவந்தது.

robbers
வழிப்பறி கொள்ளையன் ஆகாஷ்

இவரது கூட்டாளிகளான வினோத்(21), செல்வம்(21) ஆகியோரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஏழரை சவரன் நகைகளையும், 8 செல்ஃபோன்களையும் பறிமுதல் செய்த பின்னர் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ஆண்டிபட்டியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

Intro:Body:ரயில் நிலையத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்ட 3 கொள்ளையர்கள் கைது..

சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தொடர்ந்து செயின் பறிப்பு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இப்புகாரின் அடிப்படையில் ரயில்வே போலிசார் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.அப்போது பேசின் பாலம் ரயில் நிலைய வடகோடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த கன்னிகாப்புரத்தை சேர்ந்த ஆகாஷ்(21) என்பவரை ரயில்வே போலிசார் கைது.


இவரிடம் நடத்திய விசாரணையில் பேசின் பாலம் ரயில் நிலையம் மார்க்கமாக ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் வழிப்பறி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.மேலும் விசாரணையில் இவரது கூட்டாளிகளான வினோத் (21),செல்வம் (21) ஆகியோரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்து இவர்களையும் ரயில்வே போலிசார் கைது செய்தனர்..இவர்களிடமிருந்து 7அரை சவரன் நகையையும்,8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் 3பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்..Conclusion:
Last Updated : Nov 3, 2019, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.