ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 17, 2021, 7:02 PM IST

1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2. ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு வழங்கப்பட்டன.

3. மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

4. யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி

யூ-ட்யூப் மூலம் தான் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

5. பாடத்திட்டத்தில் உதவி எண்களைச் சேர்க்கக் கோரி வழக்கு: முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் குழந்தைகளுக்கான உதவி எண்களைச் சேர்க்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6. தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் - மா.சு. தகவல்

தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7. 6 வயது குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்கள் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பூரில் ஆறு வயது குழந்தையைக் கடித்துக் குதறிய தெரு நாய்களின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

8. 'இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'

பெரியாரின் புகழைப் போற்றும்விதமாக, அதிமுக இட ஒதுக்கீடு முதல் அனைத்திலும் அவர் கொள்கைப்படியே நடக்கின்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

9. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

10. கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம்மை உடைத்து கொள்ளைடிக்க முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2. ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு வழங்கப்பட்டன.

3. மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

4. யூ-ட்யூபில் மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் நிதின் கட்கரி

யூ-ட்யூப் மூலம் தான் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

5. பாடத்திட்டத்தில் உதவி எண்களைச் சேர்க்கக் கோரி வழக்கு: முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் குழந்தைகளுக்கான உதவி எண்களைச் சேர்க்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6. தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் - மா.சு. தகவல்

தமிழ்நாட்டில் சாணி பவுடர் தயாரிக்கத் தடை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7. 6 வயது குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்கள் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பூரில் ஆறு வயது குழந்தையைக் கடித்துக் குதறிய தெரு நாய்களின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

8. 'இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'

பெரியாரின் புகழைப் போற்றும்விதமாக, அதிமுக இட ஒதுக்கீடு முதல் அனைத்திலும் அவர் கொள்கைப்படியே நடக்கின்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

9. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

10. கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம்மை உடைத்து கொள்ளைடிக்க முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.