ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

author img

By

Published : Jan 31, 2021, 1:32 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM

காரில் அதிமுக கொடியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேவந்த சசிகலா!

டிஸ்சார்ஜ்க்குப் பின் சசிகலா வீட்டிலேயே தன்னை சில நாட்களுக்கு தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வெளியே வந்தார் சசிகலா.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் : நன்னிலம் பகுதி முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை 10 நாட்களாக அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!

புதுச்சேரி: மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - துரத்தி பிடித்த காவலர்!

கன்னியாகுமரி: கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி வாகனத்தை ரோந்து காவலர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளார்.

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்காசி: குற்றால அருவிகளில் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஓபிஎஸ் தொடங்கிவைத்தார்!

தேனி: கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: 4 பேர் கைது!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடி குறிக்கோள்!

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

'பலவீனம் இல்லாதவர் கோலி' - மோயீன் அலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு எந்த பலவீனமும் இல்லை என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மோயீன் அலி தெரிவித்துள்ளார்.

காரில் அதிமுக கொடியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேவந்த சசிகலா!

டிஸ்சார்ஜ்க்குப் பின் சசிகலா வீட்டிலேயே தன்னை சில நாட்களுக்கு தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வெளியே வந்தார் சசிகலா.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் : நன்னிலம் பகுதி முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் நெல் மூட்டைகளை 10 நாட்களாக அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!

புதுச்சேரி: மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - துரத்தி பிடித்த காவலர்!

கன்னியாகுமரி: கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி வாகனத்தை ரோந்து காவலர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளார்.

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்காசி: குற்றால அருவிகளில் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஓபிஎஸ் தொடங்கிவைத்தார்!

தேனி: கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: 4 பேர் கைது!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடி குறிக்கோள்!

சுகாதாரம், கல்வி, பெண்களுக்கு பாதுகாப்பு இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

'பலவீனம் இல்லாதவர் கோலி' - மோயீன் அலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு எந்த பலவீனமும் இல்லை என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மோயீன் அலி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.