ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : Jul 26, 2020, 4:59 PM IST

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-5-pm
top-10-news-5-pm

பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்த ஆடு மேய்ப்பன்

கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு தெரிவித்த காரணத்தால் மிகப்பெரிய சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

’பிரதமரின் பாராட்டு எனக்கான மோட்டிவேஷன்’ - நெகிழும் மாணவி கனிகா!

நாட்டிற்காக பணியாற்றும் பிரதமர் மோடி அவருடைய அலுவல்களுக்கிடையில் என் போன்ற மாணவர்களையும் கவனித்து பாராட்டுவது மிகப் பெரிய விசயம். அவர் நம் நாட்டை ஆளுவது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது என பெருமிதம் பொங்க பேசுகிறார், மாணவி கனிகா.

ராமர் கோயில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் - உத்தவ் தாக்ரே

கரோனா தாக்கத்தினால், ராமர் கோயில் பூமி பூஜையை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தலாம் என மகாரஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சியின் பிரத்யேக ‘சாம்னா’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

களங்கம் ஏற்படுத்துவேர் மீது நடவடிக்கை - எச்சரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா தொற்று: சென்னையில் இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை,40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமான கதைக்களம் உள்ள படங்களைத் தேர்வுசெய்யும் வெற்றி!

நடிகர் வெற்றி தொடர்ந்து தரமான கதைக்களம் உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார்.

மனைவிக்கு கேக் செய்தது குறித்து மனம் திறந்த கோலி!

கரோனா ஊரடங்கு காலத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்காக கேக் செய்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

வரும் காலங்களில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொடும் - காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒன்பதாயிரம் ரூபாய் வரை (17.5 விழுக்காடு) உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் தொடரும் என்றும், தீபாவளிக்குள் வெள்ளியின் விலை கிலோ 67 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படலாம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை அடக்க ஐ.நாவிடம் உதவி கோரும் ஆப்கன்

ஜெனீவா: நாட்டில் நுழைந்துள்ள பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்க ஐ.நாவிடம் ஆப்கன் உதவி கோரியுள்ளது.

பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் தெரிவித்த ஆடு மேய்ப்பன்

கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஊடுருவல் குறித்து அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு தெரிவித்த காரணத்தால் மிகப்பெரிய சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

’பிரதமரின் பாராட்டு எனக்கான மோட்டிவேஷன்’ - நெகிழும் மாணவி கனிகா!

நாட்டிற்காக பணியாற்றும் பிரதமர் மோடி அவருடைய அலுவல்களுக்கிடையில் என் போன்ற மாணவர்களையும் கவனித்து பாராட்டுவது மிகப் பெரிய விசயம். அவர் நம் நாட்டை ஆளுவது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது என பெருமிதம் பொங்க பேசுகிறார், மாணவி கனிகா.

ராமர் கோயில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் - உத்தவ் தாக்ரே

கரோனா தாக்கத்தினால், ராமர் கோயில் பூமி பூஜையை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தலாம் என மகாரஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சியின் பிரத்யேக ‘சாம்னா’ நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

களங்கம் ஏற்படுத்துவேர் மீது நடவடிக்கை - எச்சரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரோனா தொற்று: சென்னையில் இரண்டாயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு!

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆம்பூரில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை,40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் மிளகாய் பொடி தூவி 5 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமான கதைக்களம் உள்ள படங்களைத் தேர்வுசெய்யும் வெற்றி!

நடிகர் வெற்றி தொடர்ந்து தரமான கதைக்களம் உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார்.

மனைவிக்கு கேக் செய்தது குறித்து மனம் திறந்த கோலி!

கரோனா ஊரடங்கு காலத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்காக கேக் செய்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

வரும் காலங்களில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொடும் - காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒன்பதாயிரம் ரூபாய் வரை (17.5 விழுக்காடு) உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் தொடரும் என்றும், தீபாவளிக்குள் வெள்ளியின் விலை கிலோ 67 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படலாம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை அடக்க ஐ.நாவிடம் உதவி கோரும் ஆப்கன்

ஜெனீவா: நாட்டில் நுழைந்துள்ள பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்க ஐ.நாவிடம் ஆப்கன் உதவி கோரியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.