ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : Jul 24, 2020, 5:09 PM IST

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm

'எம்ஜிஆர் சிலை அவமதிப்பு, காட்டுமிராண்டித்தனமானது'- முதலமைச்சர் கடும் கண்டனம்!

சென்னை: புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை!

மதுரை: சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள்கள் காவல்: நீதிமன்றம் அனுமதி!

சென்னை: கந்த சஷ்டி கவச பாடலை இழிவுப்படுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்லைன் நுழைவு தேர்வு மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கலாம்!

சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பெற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் எஸ். வி. சேகர் தொடங்கிவைத்தனர்.

பாட்டீல் தலைமையின் கீழ் குஜராத் பாஜக புதிய உயரத்தை எட்டும்: மோடி

குஜராத் மாநில புதிய பாஜக தலைவராக சி.ஆர்.பாட்டீல் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தலைமையில் பாஜக புதிய உயரத்தை அடையும் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

'கரோனாவை போலவே சீனா விஷயத்திலும் பேரழிவு நடக்கும்?' - ராகுல் காந்தி

டெல்லி: கரோனா போலவே சீனா தொடர்பான விஷயத்திலும் தனது எச்சரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய இளம்பெண்கள் வெள்ளத்தில் தவிப்பு: மீட்ட காவல் துறை!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜுன்னார்டியோவின் கேதி கிராமத்தில் ஆற்றின் நடுவே செல்ஃபி எடுக்க சென்று மாட்டிக்கொண்ட இரு மாணவிகளை காவல் துறையினர் மீட்டனர்.

கரோனாவால் தள்ளிப்போன 'அவதார் 2' திரைப்படம்!

கரோனா வைரஸ் காரணமாக அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு எவ்வளவு கோடி நஷ்டம் தெரியுமா?

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் பிசிசிஐக்கு ரூ. 4 ஆயிரம் கோடிவரை நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

ராணுவ தளவாட கொள்முதல்: அண்டை நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் ஏலதாரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏதுவாக 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. இச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் இந்த விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

'எம்ஜிஆர் சிலை அவமதிப்பு, காட்டுமிராண்டித்தனமானது'- முதலமைச்சர் கடும் கண்டனம்!

சென்னை: புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை!

மதுரை: சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள்கள் காவல்: நீதிமன்றம் அனுமதி!

சென்னை: கந்த சஷ்டி கவச பாடலை இழிவுப்படுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்லைன் நுழைவு தேர்வு மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கலாம்!

சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பெற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் எஸ். வி. சேகர் தொடங்கிவைத்தனர்.

பாட்டீல் தலைமையின் கீழ் குஜராத் பாஜக புதிய உயரத்தை எட்டும்: மோடி

குஜராத் மாநில புதிய பாஜக தலைவராக சி.ஆர்.பாட்டீல் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தலைமையில் பாஜக புதிய உயரத்தை அடையும் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

'கரோனாவை போலவே சீனா விஷயத்திலும் பேரழிவு நடக்கும்?' - ராகுல் காந்தி

டெல்லி: கரோனா போலவே சீனா தொடர்பான விஷயத்திலும் தனது எச்சரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய இளம்பெண்கள் வெள்ளத்தில் தவிப்பு: மீட்ட காவல் துறை!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜுன்னார்டியோவின் கேதி கிராமத்தில் ஆற்றின் நடுவே செல்ஃபி எடுக்க சென்று மாட்டிக்கொண்ட இரு மாணவிகளை காவல் துறையினர் மீட்டனர்.

கரோனாவால் தள்ளிப்போன 'அவதார் 2' திரைப்படம்!

கரோனா வைரஸ் காரணமாக அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு எவ்வளவு கோடி நஷ்டம் தெரியுமா?

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் பிசிசிஐக்கு ரூ. 4 ஆயிரம் கோடிவரை நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

ராணுவ தளவாட கொள்முதல்: அண்டை நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளின் ஏலதாரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஏதுவாக 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. இச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் இந்த விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.