ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM

author img

By

Published : May 19, 2021, 11:14 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS 9 AM
காலை 11 மணி செய்திச் சுருக்கம்-TOP 10 NEWS 9 AM

1. சுந்தரவனக் காடுகளை தாக்கும் 'யாஷ் புயல்'?

அம்பன் புயலை அடுத்து மேற்கு வங்கம் மாநிலத்தை 'யாஷ்' என்ற புதிய புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - தேமுதிக தலைமைக் கழகம்

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக, தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

3. அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள் உயிரிழப்பு!

தர்மபுரி: அரூர் அருகே வாணியாற்று பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

4. புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: அலுவலர் பணியிடை நீக்கம்!

திண்டுக்கல்: குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்க லஞ்சம் பெற்ற அலுவலரை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

5. 'திட்டமிட்டு அலுவலர்களை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல' அமைச்சர் விளக்கம்!

திருச்சி: திமுக அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், காவல் ஆணையர் கலந்து கொண்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

6. தனது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய 9 வயது சிறுவன்!

சேலம்: 'டேப்' வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
7. வெப்ப சலனத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8. புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நியமனம் இழுபறி நீடிப்பு!

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நிகழ்ந்து வரும் பனிப்போரால் தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களை கடந்தும் தற்காலிக சபாநாயகரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

9. உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்!

சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னும் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டு மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

10. சிஐஐ சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள்: சுகாதாரத்துறையிடம் ஆளுநர் வழங்கினார்!

புதுச்சேரி: இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முககவசங்கள், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி ஆகியவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன.

1. சுந்தரவனக் காடுகளை தாக்கும் 'யாஷ் புயல்'?

அம்பன் புயலை அடுத்து மேற்கு வங்கம் மாநிலத்தை 'யாஷ்' என்ற புதிய புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - தேமுதிக தலைமைக் கழகம்

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக, தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

3. அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவர்கள் உயிரிழப்பு!

தர்மபுரி: அரூர் அருகே வாணியாற்று பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

4. புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: அலுவலர் பணியிடை நீக்கம்!

திண்டுக்கல்: குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்க லஞ்சம் பெற்ற அலுவலரை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

5. 'திட்டமிட்டு அலுவலர்களை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல' அமைச்சர் விளக்கம்!

திருச்சி: திமுக அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர், காவல் ஆணையர் கலந்து கொண்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

6. தனது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய 9 வயது சிறுவன்!

சேலம்: 'டேப்' வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
7. வெப்ப சலனத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச் சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8. புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகர் நியமனம் இழுபறி நீடிப்பு!

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நிகழ்ந்து வரும் பனிப்போரால் தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களை கடந்தும் தற்காலிக சபாநாயகரை நியமிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

9. உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்!

சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்னும் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள் குறைதீர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டு மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

10. சிஐஐ சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள்: சுகாதாரத்துறையிடம் ஆளுநர் வழங்கினார்!

புதுச்சேரி: இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு சார்பில் 1 லட்சம் முககவசங்கள், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் கருவி ஆகியவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.