சென்னை: சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில், எட்டு இடங்களில் வலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும், 350 டன் அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றப்படுகின்றன. மழை வெள்ளம் காரணமாக, வலை அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது, மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அடையாறு ஆற்றிலும், மூன்று இடங்களில், வலைகள் அமைக்கப்பட உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்கு ரூ. 1281.88 கோடி நிதி ஒதுக்கீடு