ETV Bharat / state

அரசியல் சாசன பொறுப்புகளை டிஎன்பிஎஸ்சி தட்டிக்கழிக்கக் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுரை

author img

By

Published : Jan 15, 2020, 11:06 AM IST

சென்னை: அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, தனது அரசியல் சாசன பொறுப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டிக் கழிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சி உத்தரவு Chennai High Court TNPSC Case TNPSC Case Chennai High Court Order டி.என்.பி.எஸ்.சிக்கு உயர் நீதிமன்ற உத்தரவு High Court Order To TNPSC
High Court Order To TNPSC

தமிழ்நாடு மாநில நீதித்துறையில், சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வில் வெற்றிபெற்ற புதுச்சேரி அய்யனார் நகரைச் சேர்ந்த ஏ.கே. ஆனந்த் என்பவர், பட்டியலினத்தவருக்கான சாதிச் சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், பார்த்திபன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதிச் சான்றிதழ் தரும் அதிகாரம் படைத்த வட்டாசிரியர் வழங்கிய சான்றிதழ் சரியானதல்ல என்று டிஎன்பிஎஸ்சி நிராகரித்தது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையில் தலையிடுவதாகும். காலதாமதம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி இடஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனுதாரருக்கு சாதிச்சான்றிதழ் வாங்க தரப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில்தான் தேர்வாணையம் அவரது பெயரை பட்டியலில் வெளியிடவில்லை என்றும், அவரது விண்ணப்பம் சட்டப்படியே நிராகரிக்கப்பட்டதாகவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் முதன்மை அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனது அரசியல் சாசன பொறுப்புகளை தட்டிக் கழிக்க கூடாது எனக் கூறி, மனுதாரரின் சாதிச் சான்றிதழை ஏற்று எட்டு வாரங்களுக்குள் அவரது தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் சாதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்களை தேர்வு செய்யும் நடைமுறையை மறுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சாதிச் சான்றிதழ் சமர்பிக்க முடியாத நிலை ஏற்படும்போது, அவசர கதியில் செயல்பட்டு விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏற்கத் தக்கதல்ல என்று கூறி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு மாநில நீதித்துறையில், சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வில் வெற்றிபெற்ற புதுச்சேரி அய்யனார் நகரைச் சேர்ந்த ஏ.கே. ஆனந்த் என்பவர், பட்டியலினத்தவருக்கான சாதிச் சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், பார்த்திபன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதிச் சான்றிதழ் தரும் அதிகாரம் படைத்த வட்டாசிரியர் வழங்கிய சான்றிதழ் சரியானதல்ல என்று டிஎன்பிஎஸ்சி நிராகரித்தது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையில் தலையிடுவதாகும். காலதாமதம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி இடஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனுதாரருக்கு சாதிச்சான்றிதழ் வாங்க தரப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில்தான் தேர்வாணையம் அவரது பெயரை பட்டியலில் வெளியிடவில்லை என்றும், அவரது விண்ணப்பம் சட்டப்படியே நிராகரிக்கப்பட்டதாகவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் முதன்மை அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனது அரசியல் சாசன பொறுப்புகளை தட்டிக் கழிக்க கூடாது எனக் கூறி, மனுதாரரின் சாதிச் சான்றிதழை ஏற்று எட்டு வாரங்களுக்குள் அவரது தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் சாதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்களை தேர்வு செய்யும் நடைமுறையை மறுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சாதிச் சான்றிதழ் சமர்பிக்க முடியாத நிலை ஏற்படும்போது, அவசர கதியில் செயல்பட்டு விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏற்கத் தக்கதல்ல என்று கூறி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்

Intro:Body:அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, தனது அரசியல் சாசன பொறுப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டிக் கழிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில நீதித்துறையில், சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி அய்யனார் நகரை சேர்ந்த ஏ.கே.ஆனந்த் என்பவர், பட்டியலினத்தவருக்கான சாதிச் சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாதிச்சான்றிதழ் தரும் அதிகாரம் படைத்த தாசில்தாரர் வழங்கிய சான்றிதழை சரியானதல்ல என்று டிஎன்பிஎஸ்சி நிராகரித்தது அரசியல் சாசனம் வழங்கிய உரிமையில் தலையிடுவதாகும் எனவும், காலதாமதம் என்ற ஒரே காரணத்தை காட்டி இடஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மனுதாரருக்கு சாதிச்சான்றிதழ் வாங்க தரப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில்தான் தேர்வாணையம் அவரது பெயரை பட்டியலில் வெளியிடவில்லை என்றும், அவரது விண்ணப்பம் சட்டப்படியே நிராகரிக்கப்பட்டதாகவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் முதன்மை அமைப்பான அரசுப் பணியாளர் தேர்வாணையம், தனது அரசியல் சாசன பொறுப்புகளை தட்டிக் கழிக்க கூடாது எனக் கூறி, மனுதாரரின் சாதிச் சான்றிதழை ஏற்று, எட்டு வாரங்களுக்குள் அவரது தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் சாதிச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், அவர்களை தேர்வு செய்யும் நடைமுறையை மறுக்க கூடாது என்ற மத்திய அரசின் விதிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சாதிச்சான்றிதழ் சமர்பிக்க முடியாத நிலை ஏற்படும்போது, அவசர கதியில் செயல்பட்டு, விண்ணப்பத்தை நிராகரிப்பது ஏற்கத் தக்கதல்ல எனவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.