ETV Bharat / state

கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு..!

author img

By

Published : Oct 20, 2022, 5:18 PM IST

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2022 ‑ 2023ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் உணவுத் தொழில்நுட்பம் , கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட 16,214 விண்ணப்பங்களுள், 13,470 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும், 2,744 விண்ணப்பங்கள் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன.

அதன்படி, 2022 ‑ 2023ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in. பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் சந்திரசேகர், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பாண்டி, தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஹரினிகா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த மாணவி சுபா கீதா 200 க்கு 199.500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அஸ்வின் இரண்டாம் இடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த ஷாஜீகா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ், சேலம் மாவட்டத்தை சார்ந்த வர்ஷா தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மகாலட்சுமி ஆகியோர் தரவரிசைப்பட்டியலில் முதன்மை பெற்றுள்ளனர்.

சிறப்புப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு) மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

சிறப்புப் பிரிவான முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு (7.5 சதவீதம்), கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு ஆகிய மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் சலுகை..!

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2022 ‑ 2023ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் உணவுத் தொழில்நுட்பம் , கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குத் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட 16,214 விண்ணப்பங்களுள், 13,470 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும், 2,744 விண்ணப்பங்கள் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான உணவுத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன.

அதன்படி, 2022 ‑ 2023ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in மற்றும் https://tanuvas.ac.in. பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாணவர் சந்திரசேகர், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பாண்டி, தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஹரினிகா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த மாணவி சுபா கீதா 200 க்கு 199.500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அஸ்வின் இரண்டாம் இடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த ஷாஜீகா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ், சேலம் மாவட்டத்தை சார்ந்த வர்ஷா தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த சக்திவேல், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த மகாலட்சுமி ஆகியோர் தரவரிசைப்பட்டியலில் முதன்மை பெற்றுள்ளனர்.

சிறப்புப் பிரிவில் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு) மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேரடி கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

சிறப்புப் பிரிவான முன்னாள் இராணுவ வீரர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு (7.5 சதவீதம்), கலையியல் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு ஆகிய மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ஆம் தேதி காலை 10 மணி முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பில் சலுகை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.