ETV Bharat / state

'கமலை அச்சுறுத்துவது அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்..!' - திருமா எச்சரிக்கை!

சென்னை: "கமல்ஹாசனை அச்சுறுத்துவது தமிழக அரசியலில் இருக்கும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும்" என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

author img

By

Published : May 15, 2019, 8:35 PM IST

Updated : May 15, 2019, 10:45 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

தமிழ்நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “கருவேப்பிலங்குறிச்சி திலகவதி படுகொலை காட்டுமிராண்டி தனத்தின் உச்சநிலை ஆகும். சாதி, மதம் என்பது உள்ளீடாக இந்த வன்கொடுமைகளுக்கு காரணமாக இருந்தாலும், ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைக்கு காரணம்.

இந்த ஆணாதிக்க படுகொலைகள் அனைத்து சமுகத்திலும் அரங்கேறி வருகிறது. படுகொலைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கலாம். இந்த கொலை குற்றங்களை விசாரிக்கும் தமிழக காவல்துறை அரசியல், சாதி சக்திகளுக்கு இணங்கி செயல்படுகின்றன்ர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் " என்றார்.

கமலை அச்சுறுத்துவது அரசியல் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும் - திருமாவளவன்


தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது தமிழ்நாடு அரசியலின் திசையை வன்முறைக்கு இட்டுச் செல்வது போல் அமைந்துள்ளது. சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றாக அதிமுக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. இது போன்ற வன்முறை தடித்த வார்த்தைகள் வடமாநிலங்களில்தான் ஒலிக்கும். தற்போது தமிழகத்தில் அதுவும் உயர் பதவியிலிருக்கும் அமைச்சர் பேசியிருப்பது சரியில்லை.

கோட்சே எதற்காக காந்தியை கொலை செய்தார் என்பது அவர் வாக்குமூலத்தில் இருக்கிறது. எனவே உண்மையை கூறிய கமலை அச்சுறுத்துவது தமிழக அரசியலில் இருக்கும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும். அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “கருவேப்பிலங்குறிச்சி திலகவதி படுகொலை காட்டுமிராண்டி தனத்தின் உச்சநிலை ஆகும். சாதி, மதம் என்பது உள்ளீடாக இந்த வன்கொடுமைகளுக்கு காரணமாக இருந்தாலும், ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த படுகொலைக்கு காரணம்.

இந்த ஆணாதிக்க படுகொலைகள் அனைத்து சமுகத்திலும் அரங்கேறி வருகிறது. படுகொலைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கலாம். இந்த கொலை குற்றங்களை விசாரிக்கும் தமிழக காவல்துறை அரசியல், சாதி சக்திகளுக்கு இணங்கி செயல்படுகின்றன்ர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் " என்றார்.

கமலை அச்சுறுத்துவது அரசியல் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும் - திருமாவளவன்


தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது தமிழ்நாடு அரசியலின் திசையை வன்முறைக்கு இட்டுச் செல்வது போல் அமைந்துள்ளது. சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றாக அதிமுக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. இது போன்ற வன்முறை தடித்த வார்த்தைகள் வடமாநிலங்களில்தான் ஒலிக்கும். தற்போது தமிழகத்தில் அதுவும் உயர் பதவியிலிருக்கும் அமைச்சர் பேசியிருப்பது சரியில்லை.

கோட்சே எதற்காக காந்தியை கொலை செய்தார் என்பது அவர் வாக்குமூலத்தில் இருக்கிறது. எனவே உண்மையை கூறிய கமலை அச்சுறுத்துவது தமிழக அரசியலில் இருக்கும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும். அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் சமீப காலமாக அரங்கேறி வரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு தலைமை தாங்கி பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “கருவேப்பிலங்குறிச்சி திலகவதி படுகொலை காட்டுமிராண்டி தனத்தின் உச்சநிலை ஆகும். சாதி, மதம் என்பது உள்ளீடாக இந்த வன்கொடுமைகளுக்கு காரணமாக இருந்தாலும் ஆணாதிக்க தனத்தின் வெளிப்பாடு தான் இந்த படுகொளைக்கு காரணம். இந்த ஆணாதிக்க படுலொலைகள் அனைத்து சமுகத்திலும் அரங்கேறி வருகிறது. படுகொலைகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கலாம். இந்த கொலை குற்றங்களை விசாரிக்கும் தமிழக காவல்துறை அரசியல், சாதி சக்திகளுக்கு இணங்கி செயல்படுகின்றன்ர். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திருவாரூர் அருகே மன்னார்குடி அர்கே திருவாண்டுதுறை கிராமத்தில் கடந்த ஏபரல் 28 அன்று கொல்லிமலை தனது செங்கல் சூளைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் கல்லால் தாக்கப்பட்டு அவர் வாயில் மலத்தை திணித்து அவர்மீது சிறுநீரை கழித்துள்ளனர். இதைச் செய்த முவரில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 21 ஆம் நூற்றாண்டிலும் மனித கழிவை ஒருவர் வாயில் திணித்து தாக்குவது என்பது எத்தனை பைத்தியக்கார தனமான ஒரு செயல். அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராதவாறு விசாரித்து தண்டிக்க வேண்டும். இது போன்று பெண்களுக்கு எதிரான, தலித், பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால் எந்த மாநிலத்திலும் இது நடைமுறைப்படுத்துவது இல்லை. குற்றவாளிகளை ஜாமீனில் வெளிவிடுவது தொடர்ந்து நடந்துவருகிறது. எனவே திலகவதி, கொல்லிமலை விவகாரங்களை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும். திலகவதி குடும்பத்துக்கு 1 கோடி ரூபாஇ இழப்பீடு வழங்கி அவர் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கொல்லிமலை குடும்பத்தாருக்கு நிவாரனம் வழங்கி அவர் குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இதேபோல் பண்ருட்டி அருகே நெல்லிக்குப்பம் பக்கத்தில் குச்சிப்பாலையம் கிராமத்தில் தலித் சமுகத்தினர் தாகுதல் நடத்தியதாக திருத்தி சொல்கின்றன்ர். அதிமுக வைச் சார்ந்த திவாகரனும், லெனினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தனசீலன் என்பவரது பைக்கில் தர்மராஜ் என்பவரை சந்திக்க சென்றுள்ளனர். குச்சிப்பாளையம் கிராம்த்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சாதி வெறியர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். சென்றவர்கள் அ.தி.மு.க வைச் சார்ந்தவர்கள் என்றாலும் கூட அவர்கள் எடுத்துச் சென்ற பைக்கில் அம்பேத்கர் பட்மும் என்னுடைய படமும் வரையப்பட்டிருந்ததால் அதை அடித்து நொருக்கி உள்ளனர். இதில் தர்மராஜ் தலையில் ஓங்கி அவர்கள் கொடுவாளால் வெட்டியதில் அவருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது. திவாகரனை கட்டி வைத்து அடித்து மண்வெட்டியில் தாக்கியதில் அவர் தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளது. இது தான் உண்மை சம்பவம். இதனை திருத்தி தலித்கள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக சாதி வெறியர்கள் கூறி வருகின்றனர். வதந்தியை பரப்பி வடமாவட்டங்களில் தாக்குதலை நடத்திவரும் பா.ம.க சாதி வெறியர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக அரசியலை தலித், தலித் அல்லாதோர் என்று இரு துருவங்களாக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நின்னைகிறார். அதனால் தான் சாதி, காஅதல் பிரச்னைகளை கூர்மைப்படுத்தி வருகிறார். அவருக்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கையை பின்பற்றி 50 ஆண்டுகாலம் பக்குவப்பட்டிருக்கும் தமிழ்நாட்டை பாழ்படுத்துகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இதனை ஜனநாயக சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலை புலிகளை அடியோடு அழித்து விட்டோம் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே கொக்கரித்தார். இதையே இந்திய அரசும் சொன்னது. ஆனால் தற்போது பத்து ஆண்டுகள் நிறைவைடந்துள்ள நிலையில் அந்த அமைப்புக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இல்லாத ஒரு அமைப்புக்கு தடை விதிக்கிறது என்றால் அது இந்தியா மட்டும் தான். இது உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை என்பதை விட உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை அச்சுறுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.  

நடிகர் கமல்ஹாசனின் நாக்டை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது தமிழ்நாடு அரசியலின் திசையை வன்முறைக்கு இட்டுச் செல்வது போல் அமைந்துள்ளது. அ.தி.மு.க சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது. இது போன்ற வன்முறை தடித்த வார்த்தைகள் வடமாநிலங்களில் தான் ஒலிக்கும். தற்போது தமிழக்த்தில் அதுவும் உயர் பதவியிலிருக்கும் அமைச்சர் பேசியிருப்பது சரியில்லை. நாத்துராம் கோட்சே எதற்காக காந்தியை கொலை செய்தார் என்பது அவர் வாக்குமூலத்தில் இருக்கிறது. எனவே உண்மையை கூறிய கமலை அச்சுறுத்துவது தமிழக அரசியலில் இருக்கும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்கும். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மாண்புமிகு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். 

நாத்துராம் கோட்சேவின் செயல் தீவிரவாத செயல் என்று சர்தார் வல்லபாய் படேல் அவர்களே சொல்லியிருக்கிறார். அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது ஆர்.எஸ்.எஸ் இயக்கமே தடை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விளைச்சலாக இருப்பவர் நரேந்திர மோடி. எனவே அவர் நாத்துராம் கோட்சேவுக்கு வாக்காளத்து வாங்கி தான் பேசுவார். இந்த சங் பரிவார் அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று ஜனநாயக சக்திகள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.







Last Updated : May 15, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.