ETV Bharat / state

'ஸ்டாலினின் நடவடிக்கையை கொச்சைப்படுத்துவதா?'..கர்நாடக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம்

மேகதாது அணை பிரச்சனை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை, கர்நாடக முதலமைச்சர் அரசியல் ஆதாயத்திற்காக எனக் கூறி கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 15, 2022, 6:56 PM IST

துரைமுருகன் கண்டனம்
துரைமுருகன் கண்டனம்

சென்னை: கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து இன்று (ஜூன் 15) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை இன்று பல செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. அவ்வறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல. மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

கூட்டாட்சி தத்துவத்தின்படி நடந்து கொள்க: ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

கர்நாடக அரசின் அதிகாரிகள் இது குறித்து கர்நாடக முதலமைச்சருக்கு சரியான தகவல்கள் அளிக்கவில்லை போலும். இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள் கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் படுகை மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, திட்ட வாரியாக ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நீர்த் தேவை என்பதை கணக்கிட்டு நீரை பங்கீடு செய்துள்ளது. சில திட்டங்களை நிராகரித்தும் உள்ளது. இதனை உச்சநீதிமன்றம் தனது 16.02.2018 ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில் அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின்படியும், மாநிலங்கள் உச்சநீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது.

தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது: மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில் அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக 67.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசின் கடிதம் சட்ட விரோதமானது" - கர்நாடக முதலமைச்சர்

சென்னை: கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து இன்று (ஜூன் 15) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை இன்று பல செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. அவ்வறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல. மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

கூட்டாட்சி தத்துவத்தின்படி நடந்து கொள்க: ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

கர்நாடக அரசின் அதிகாரிகள் இது குறித்து கர்நாடக முதலமைச்சருக்கு சரியான தகவல்கள் அளிக்கவில்லை போலும். இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள் கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் படுகை மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, திட்ட வாரியாக ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நீர்த் தேவை என்பதை கணக்கிட்டு நீரை பங்கீடு செய்துள்ளது. சில திட்டங்களை நிராகரித்தும் உள்ளது. இதனை உச்சநீதிமன்றம் தனது 16.02.2018 ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில் அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின்படியும், மாநிலங்கள் உச்சநீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது.

தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது: மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில் அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக 67.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு அரசின் கடிதம் சட்ட விரோதமானது" - கர்நாடக முதலமைச்சர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.