ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை: தோட்டக்கலைத் துறையின் அசத்தும் ஐடியா! - கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கிறிஸ்மஸ் மரம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கிறிஸ்துமஸ் மரங்களை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை விற்பனை செய்துவருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தோட்டக்கலை துறையின் அசத்தும் ஐடியா!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தோட்டக்கலை துறையின் அசத்தும் ஐடியா!
author img

By

Published : Dec 19, 2019, 10:48 PM IST

Updated : Dec 19, 2019, 11:02 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடு காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க மரங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவதால், காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அளவும் அதிகரித்துள்ளது. மனித இனத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்தச் சிக்கலைத் தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், இயற்கையான முறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் கிறிஸ்துமஸ் பொம்மைகள், செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்குவது வழக்கம். இவற்றை இயற்கையான முறையில் உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. இதற்காக உண்மையான கிறிஸ்துமஸ் மரங்களை வளர்த்து அதன் விற்பனையும் நடைபெற்றுவருகிறது.

அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் காற்று மாசுவை தடுக்க உதவுகிறது. சென்னை மாதவரம் தோட்டக்கலை பண்ணை பூங்கா, செம்மொழி பூங்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த மரங்களின் மூலம் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையையும் பாதுகாக்க முடியும் என்கிறார் செம்மொழி பூங்கா தோட்டக்கலை அலுவலர் தினேஷ்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தோட்டக்கலை துறையின் அசத்தும் ஐடியா!

இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் ஒவ்வொன்றும் தலா 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல்கட்டமாக 1500 செடிகள் மட்டும் அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றின் விற்பனை அதிகரித்தால் மேலும் பல இடங்களிலும் விற்பனை செய்ய தயாராக உள்ளனர் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர். இயற்கை பொருள்களைக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தமிழ்நாடு தோட்டக்கலையின் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.

இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடு காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க மரங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவதால், காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அளவும் அதிகரித்துள்ளது. மனித இனத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்தச் சிக்கலைத் தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், இயற்கையான முறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேலையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் கிறிஸ்துமஸ் பொம்மைகள், செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்குவது வழக்கம். இவற்றை இயற்கையான முறையில் உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை களமிறங்கியுள்ளது. இதற்காக உண்மையான கிறிஸ்துமஸ் மரங்களை வளர்த்து அதன் விற்பனையும் நடைபெற்றுவருகிறது.

அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் காற்று மாசுவை தடுக்க உதவுகிறது. சென்னை மாதவரம் தோட்டக்கலை பண்ணை பூங்கா, செம்மொழி பூங்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த மரங்களின் மூலம் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையையும் பாதுகாக்க முடியும் என்கிறார் செம்மொழி பூங்கா தோட்டக்கலை அலுவலர் தினேஷ்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தோட்டக்கலை துறையின் அசத்தும் ஐடியா!

இந்த கிறிஸ்துமஸ் மரங்கள் ஒவ்வொன்றும் தலா 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல்கட்டமாக 1500 செடிகள் மட்டும் அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றின் விற்பனை அதிகரித்தால் மேலும் பல இடங்களிலும் விற்பனை செய்ய தயாராக உள்ளனர் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர். இயற்கை பொருள்களைக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தமிழ்நாடு தோட்டக்கலையின் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.

இதையும் படிங்க...SBI நகை மதிப்பீட்டாளருக்கான தொகை நிர்ணய அறிவிப்பிற்கு தடை!

Intro:Body:சென்னை //செய்தியாளர் விஜய்// கேமரா மேன் ராஜேந்திர பிரசாத்


கிருஸ்துமஸ் மரங்கள் விற்பனை

தோட்டக்கலை துறையின் புதிய ஐடியா

வாகனங்களின் பயன்பாடு காற்று மாசுவை அதிகரித்து வருகின்றன. மேலும் மரங்களின் எண்ணிக்கை குறைவதாலும் கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவில் வெளியாகிறது. எனவே இயற்கையான முறையில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வேளையில் தோட்டக்கலை துறை ஈடுபட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதால் கிருஸ்துமஸ் பொம்மைகள் மற்றும் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்கள் வளர்ப்பது வழக்கம். எனவே தமிழக தோட்டக்கலை துறை சார்பில் முதன்முறையாக உண்மையான கிறிஸ்துமஸ் செடிகள் விற்பனைக்கு கொண்டுவர பட்டுள்ளன. இந்த மரங்கள் அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடுவதால் காற்று மாசு தடுக்கப்படுகிறது. எனவே கிறிஸ்துமஸ் செடிகள் மாதவரம் தோட்டக்கலை பண்ணை பூங்கா மற்றும் செம்மொழி பூங்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையையும் பாதுகாக்க முடியும் என்கிறார் செமொழி பூங்கா தோட்டக்கலை அலுவலர் தினேஷ் குமார்.

அவரது பேட்டி........


இயற்கையை பாதுகாக்கும் என்பதாலும், எந்த மண்ணிலும் வளர்க்கலாம் என்பதாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல மண்ணில் வளர்த்தால் 3 ஆண்டுகளில் நன்கு வளரும் தன்மை கொண்ட கிறிஸ்துமஸ் மரம், ஆக்சிஜனை அதிக அளவில் வெளியிட்டு கார்பன் அளவை கட்டுப்படுத்துகிறது. 110 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு செடி, மாதவரம் பண்ணையில் வளர்க்கப்பட்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 1500 செடிகள் மட்டும் அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விற்பனை அதிகரித்தால் மேலும் பல இடங்களிலும் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தமிழக தோட்டக்கலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விநாயகர் சதுர்த்திக்கு விதை விநாயகர், தீபாவளிக்கு விதை வெடி என்ற வரிசையில் தற்போது கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு வந்துள்ள தமிழக தோட்டகலை துறை, வரும் புத்தாண்டுக்கு மலர் 'போக்கே' விற்பனை செய்ய உள்ளது. இயற்கை பொருட்கள் கொண்டு சுற்று சூழலை பாதுகாக்கும் தமிழக தோட்டக்கலையின் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.

Conclusion:
Last Updated : Dec 19, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.