ETV Bharat / state

நயன்-விக்கி தம்பதி குழந்தை பெற்ற மருத்துவமனை தெரிந்துவிட்டது.. அமைச்சர் அதிரடி தகவல்...

author img

By

Published : Oct 14, 2022, 1:38 PM IST

Updated : Oct 14, 2022, 2:03 PM IST

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்ற மருத்துவமனை விவரம் தெரிய வந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

அமைச்சர் அதிரடி தகவல்
அமைச்சர் அதிரடி தகவல்

சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நிலையில், இது விதிகளுக்குட்பட்டு நடைபெற்றதா? என்பதை அறிய தமிழக அரசு குழு அமைத்தது. மருத்துவத்துறை குழுவின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதன்படி, நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டனர், என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதில் சட்டம் மற்றும் விதிமீறல்கள் உள்ளதா? யாரேனும் சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து , ஒரு வார காலத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வாடகை தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் இருவரும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா - விசாரணை தொடக்கம்

சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நிலையில், இது விதிகளுக்குட்பட்டு நடைபெற்றதா? என்பதை அறிய தமிழக அரசு குழு அமைத்தது. மருத்துவத்துறை குழுவின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதன்படி, நயன்தாரா, விக்னேஷ் எந்த மருத்துவமனையை அணுகி இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டனர், என்பதை மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதில் சட்டம் மற்றும் விதிமீறல்கள் உள்ளதா? யாரேனும் சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதை கண்டறிந்து , ஒரு வார காலத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வாடகை தாய் விவகாரத்தில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் இருவரும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற நயன்தாரா - விசாரணை தொடக்கம்

Last Updated : Oct 14, 2022, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.