ETV Bharat / state

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

author img

By

Published : Jul 25, 2020, 7:33 PM IST

சென்னை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கட்டாய இலவச பரிசோதனை செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

TN govt. instructed to take covid-19 test for ration workers in containment zone
கட்டுப்படுத்தப்ப பகுதி ரேசன்கடை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

பொது விநியோகத் திட்ட பணியாளர்களை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாத்தல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் அறிவுரைகளுடன் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில், “கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், தமிழ்நாடு அரசால் மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது சில தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பொதுமுடக்கக் காலத்தில், பொது மக்களின் இன்னல்களைப் போக்கும் வண்ணம் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திங்கள்கிழமை தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை மற்றும் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் மாதம் திங்கள்கிழமைகளில் மாநிலத்திலுள்ள அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ரொக்க நிவாரண தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணையிட்டது.

இதேபோல் ஜூன் மாதம் திங்கள்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரசு உத்தரவிட்டது. மேற்குறிப்பிட்ட பணி தொடர்பாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை சந்தித்து கீழ்க்கண்டவாறு தமது கடமையை ஆற்றி வருகின்றனர்.

1. ரூ.1,000 ரொக்க நிவாரணத் தொகை வழங்குதல்.
2. கட்டுப்பாட்டு பொருள்களுடன் கூடுதல் அரிசியையும் வழங்குதல்.
3. அரசு அறிவிப்பின்படி, சமூக விலகலை உறுதிபடுத்த ஏதுவாக டோக்கன்களை வீடுதோறும் சென்று வழங்குதல்.
4. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரூ. 1,000 ரொக்க நிவாரணத் தொகையை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று வழங்குதல்.

இவ்வாறு மாதத்தின் அனைத்து வேலை நாள்களிலும் தமது பணிநிமித்தமாக நூற்றுக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களை சந்தித்து, விநியோகப் பணியை மேற்கொள்வதால், கரோனா வைரஸ் தொற்றுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு இப்பணியாளர்களுக்கு அதிகமாக உள்ளது.

எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களைத் தற்காத்து கொள்ளும் பொருட்டு அவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கண்காணிக்குமாறும், அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான கையுறை, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறும் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:

1. அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான முகக்கவசம் , கையுறைகள், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவை அந்த நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடி போன்றவை காரணமாக இவை வழங்கப்படவில்லை என்ற புகார்கள் ஏதும் எழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்து, அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் இவை வழங்கப்படுவதை மண்டல இணைப்பதிவாளர்கள்/இணைப்பதிவாளர் (பொது) ஆகியோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, மாவட்ட ஆட்சியர்/சுகாதாரத்துறை இணை இயக்குநர்/சென்னை மாநகராட்சி ஆணையர்/தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மண்டல கிடங்குகளின் பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு, நியாய விலைக் கடை பணியாளர்களுக்குத் தேவையான துத்தநாகம் (Zinc), வைட்டமின் (Vitamin) அடங்கிய சத்து மாத்திரைகளையும், கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகளையும் பெற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒருமுறை வழங்குவதோடு நிறுத்திவிடாமல், இந்தப் பணியாளர்களுக்கு தேவையான மேற்படி மருந்துகள் அவர்கள் தினசரி பயன்படுத்த தேவையான அளவு பெற்று தொடர்ச்சியாக வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

3. தங்கள் மண்டலத்திலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள நியாயவிலைக்கடைகளில்) பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கரோனாே பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்து, அதனை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் செயல்படும் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்/கட்டுநர் எவரேனும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், மற்றொரு நபருக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்யவும், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

4. கட்டாய பரிசோதனைகளின் மூலமாகவும், வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலமாகவும், கரோனா வைரஸ் தொற்று உறுதியான பணியாளர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5.கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை பணியாளர்கள் பணிபுரிந்த நியாயவிலைக் கடைகள் உடனடியாக கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் (Sanitize) செய்ய அறிவுறுத்தி, அதனை கண்காணிக்க வேண்டும்.

6. மேற்படி நியாயவிலைக்கடைகள் மாற்று பணியாளர்களை கொண்டு, தடையின்றி செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

7. கரோனா தொற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுரைப்படி, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள (Home quarantine) அறிவுறுத்தப்பட்டுள்ள காலத்துக்கு இப்பணியாளர்கள் வீட்டிலேயே தனிமையில் இருப்பதை உறுதி செய்து, அதன் பின் அவர்கள் பணியில் மீண்டும் சேர அனுமதிக்க வேண்டும்.

8. இந்தப் பணியாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காலத்திலும், வீட்டில் தனிமையில் இருக்கும் காலத்திலும், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யவும், மனதளவில் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும், அவர்கள் சார்ந்துள்ள சங்க நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கி அதனைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இ்ந்த வேளையில் தமக்கும் கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புண்டு என்பதை உணர்ந்தும் நலிவுற்ற மக்களின் பசிப்பிணி போக்கும் அரிய பணியில் தினந்தோறும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களது சொந்த நலனையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு மேற்கூறிய அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 8 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்களின எண்ணிக்கை!

பொது விநியோகத் திட்ட பணியாளர்களை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாத்தல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் கூடுதல் அறிவுரைகளுடன் கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில், “கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், தமிழ்நாடு அரசால் மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது சில தளர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பொதுமுடக்கக் காலத்தில், பொது மக்களின் இன்னல்களைப் போக்கும் வண்ணம் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திங்கள்கிழமை தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை மற்றும் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் மாதம் திங்கள்கிழமைகளில் மாநிலத்திலுள்ள அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ரொக்க நிவாரண தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆணையிட்டது.

இதேபோல் ஜூன் மாதம் திங்கள்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிடவும் அரசு உத்தரவிட்டது. மேற்குறிப்பிட்ட பணி தொடர்பாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை சந்தித்து கீழ்க்கண்டவாறு தமது கடமையை ஆற்றி வருகின்றனர்.

1. ரூ.1,000 ரொக்க நிவாரணத் தொகை வழங்குதல்.
2. கட்டுப்பாட்டு பொருள்களுடன் கூடுதல் அரிசியையும் வழங்குதல்.
3. அரசு அறிவிப்பின்படி, சமூக விலகலை உறுதிபடுத்த ஏதுவாக டோக்கன்களை வீடுதோறும் சென்று வழங்குதல்.
4. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ரூ. 1,000 ரொக்க நிவாரணத் தொகையை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று வழங்குதல்.

இவ்வாறு மாதத்தின் அனைத்து வேலை நாள்களிலும் தமது பணிநிமித்தமாக நூற்றுக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களை சந்தித்து, விநியோகப் பணியை மேற்கொள்வதால், கரோனா வைரஸ் தொற்றுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு இப்பணியாளர்களுக்கு அதிகமாக உள்ளது.

எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களைத் தற்காத்து கொள்ளும் பொருட்டு அவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை கண்காணிக்குமாறும், அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான கையுறை, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறும் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:

1. அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் போதுமான முகக்கவசம் , கையுறைகள், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவை அந்த நியாயவிலைக் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். நிதி நெருக்கடி போன்றவை காரணமாக இவை வழங்கப்படவில்லை என்ற புகார்கள் ஏதும் எழாமல் மாற்று ஏற்பாடுகள் செய்து, அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கும் இவை வழங்கப்படுவதை மண்டல இணைப்பதிவாளர்கள்/இணைப்பதிவாளர் (பொது) ஆகியோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

2. ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, மாவட்ட ஆட்சியர்/சுகாதாரத்துறை இணை இயக்குநர்/சென்னை மாநகராட்சி ஆணையர்/தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மண்டல கிடங்குகளின் பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு, நியாய விலைக் கடை பணியாளர்களுக்குத் தேவையான துத்தநாகம் (Zinc), வைட்டமின் (Vitamin) அடங்கிய சத்து மாத்திரைகளையும், கபசுரக் குடிநீர் போன்ற மருந்துகளையும் பெற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒருமுறை வழங்குவதோடு நிறுத்திவிடாமல், இந்தப் பணியாளர்களுக்கு தேவையான மேற்படி மருந்துகள் அவர்கள் தினசரி பயன்படுத்த தேவையான அளவு பெற்று தொடர்ச்சியாக வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

3. தங்கள் மண்டலத்திலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள நியாயவிலைக்கடைகளில்) பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கரோனாே பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்து, அதனை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் செயல்படும் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்/கட்டுநர் எவரேனும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், மற்றொரு நபருக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்யவும், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

4. கட்டாய பரிசோதனைகளின் மூலமாகவும், வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலமாகவும், கரோனா வைரஸ் தொற்று உறுதியான பணியாளர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5.கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை பணியாளர்கள் பணிபுரிந்த நியாயவிலைக் கடைகள் உடனடியாக கிருமிநாசினி கொண்டு கிருமி நீக்கம் (Sanitize) செய்ய அறிவுறுத்தி, அதனை கண்காணிக்க வேண்டும்.

6. மேற்படி நியாயவிலைக்கடைகள் மாற்று பணியாளர்களை கொண்டு, தடையின்றி செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

7. கரோனா தொற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுரைப்படி, வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள (Home quarantine) அறிவுறுத்தப்பட்டுள்ள காலத்துக்கு இப்பணியாளர்கள் வீட்டிலேயே தனிமையில் இருப்பதை உறுதி செய்து, அதன் பின் அவர்கள் பணியில் மீண்டும் சேர அனுமதிக்க வேண்டும்.

8. இந்தப் பணியாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காலத்திலும், வீட்டில் தனிமையில் இருக்கும் காலத்திலும், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யவும், மனதளவில் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும், அவர்கள் சார்ந்துள்ள சங்க நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கி அதனைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் இ்ந்த வேளையில் தமக்கும் கரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்புண்டு என்பதை உணர்ந்தும் நலிவுற்ற மக்களின் பசிப்பிணி போக்கும் அரிய பணியில் தினந்தோறும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வரும் நியாயவிலைக்கடை பணியாளர்களது சொந்த நலனையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு மேற்கூறிய அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் 8 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்களின எண்ணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.