ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,725 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Nov 16, 2020, 7:08 PM IST

Updated : Nov 16, 2020, 10:54 PM IST

தமிழ்நாட்டில் இன்று 1725 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1725 பேருக்கு கரோனா தொற்று உறுதி

18:59 November 16

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,725 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாள்களாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவாகவே இருந்துவருகிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நவம்பர் 16ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் தாம்பரத்தில் மேலும் ஒரு புதிதாக தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில், புதிதாக 62 ஆயிரத்து 982 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 721 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 725 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 878 நபர்களுக்கு ஆர்டிடிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஏழு லட்சத்து 59 ஆயிரத்து 916 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 765 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் இரண்டாயிரத்து 384 நபர்கள், குணமடைந்த இரண்டாயிரத்து 384 நபர்கள் மேலும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 9 பேரும், அரசு மருத்துவமனையில் 8 பேரும் என 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 என உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இன்று ஒருவருக்குக்கூட நோய்தொற்று ஏற்படவில்லை. தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும் புதிதாக நோய்த் தொற்று மிகக் குறைந்த அளவில் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
 

  • சென்னை -2,09,167

     
  • கோயம்புத்தூர் -46,587

     
  • செங்கல்பட்டு -46,027

     
  • திருவள்ளூர் -39,696

     
  • சேலம் -28,869

     
  • காஞ்சிபுரம் -26,822

     
  • கடலூர் -23,842

     
  • மதுரை -19,349

     
  • வேலூர் -18,769

     
  • திருவண்ணாமலை -18,300

     
  • தேனி -16,449

     
  • தஞ்சாவூர் -16,056

     
  • விருதுநகர் -15,692

     
  • தூத்துக்குடி -15,474


     
  • கன்னியாகுமரி -15,438

     
  • ராணிப்பேட்டை - 15,361


     
  • திருநெல்வேலி -14,620


     
  • விழுப்புரம் - 14,323


     
  • திருப்பூர் - 14,368


     
  • திருச்சிராப்பள்ளி - 13,074

     
  • ஈரோடு - 11,662


     
  • புதுக்கோட்டை - 10,951

     
  • கள்ளக்குறிச்சி - 10,528

     
  • திண்டுக்கல் - 10,066


     
  • திருவாரூர் - 10,164

     
  • நாமக்கல் - 9,937


     
  • தென்காசி - 7,939


     
  • நாகப்பட்டினம் - 7,246


     
  • திருப்பத்தூர் - 7,061

     
  • நீலகிரி - 7,130

     
  • கிருஷ்ணகிரி - 7,115

     
  • ராமநாதபுரம் - 6,129

     
  • சிவகங்கை - 6,156

     
  • தருமபுரி - 5,884

     
  • அரியலூர்- 4,505
     
  • கரூர் - 4,593
     
  • பெரம்பலூர் - 2,228
     
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 925
     
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 986
     
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

18:59 November 16

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,725 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாள்களாக கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவாகவே இருந்துவருகிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நவம்பர் 16ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் தாம்பரத்தில் மேலும் ஒரு புதிதாக தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில், புதிதாக 62 ஆயிரத்து 982 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 721 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் டெல்லியிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 725 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 878 நபர்களுக்கு ஆர்டிடிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஏழு லட்சத்து 59 ஆயிரத்து 916 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 765 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் இரண்டாயிரத்து 384 நபர்கள், குணமடைந்த இரண்டாயிரத்து 384 நபர்கள் மேலும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்து 32 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 9 பேரும், அரசு மருத்துவமனையில் 8 பேரும் என 17 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 என உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இன்று ஒருவருக்குக்கூட நோய்தொற்று ஏற்படவில்லை. தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் மூன்று பேருக்கும் புதிதாக நோய்த் தொற்று மிகக் குறைந்த அளவில் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
 

  • சென்னை -2,09,167

     
  • கோயம்புத்தூர் -46,587

     
  • செங்கல்பட்டு -46,027

     
  • திருவள்ளூர் -39,696

     
  • சேலம் -28,869

     
  • காஞ்சிபுரம் -26,822

     
  • கடலூர் -23,842

     
  • மதுரை -19,349

     
  • வேலூர் -18,769

     
  • திருவண்ணாமலை -18,300

     
  • தேனி -16,449

     
  • தஞ்சாவூர் -16,056

     
  • விருதுநகர் -15,692

     
  • தூத்துக்குடி -15,474


     
  • கன்னியாகுமரி -15,438

     
  • ராணிப்பேட்டை - 15,361


     
  • திருநெல்வேலி -14,620


     
  • விழுப்புரம் - 14,323


     
  • திருப்பூர் - 14,368


     
  • திருச்சிராப்பள்ளி - 13,074

     
  • ஈரோடு - 11,662


     
  • புதுக்கோட்டை - 10,951

     
  • கள்ளக்குறிச்சி - 10,528

     
  • திண்டுக்கல் - 10,066


     
  • திருவாரூர் - 10,164

     
  • நாமக்கல் - 9,937


     
  • தென்காசி - 7,939


     
  • நாகப்பட்டினம் - 7,246


     
  • திருப்பத்தூர் - 7,061

     
  • நீலகிரி - 7,130

     
  • கிருஷ்ணகிரி - 7,115

     
  • ராமநாதபுரம் - 6,129

     
  • சிவகங்கை - 6,156

     
  • தருமபுரி - 5,884

     
  • அரியலூர்- 4,505
     
  • கரூர் - 4,593
     
  • பெரம்பலூர் - 2,228
     
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 925
     
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 986
     
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428
Last Updated : Nov 16, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.