ETV Bharat / state

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான்! - முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள்  அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Aug 21, 2020, 10:04 AM IST

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துச் செய்தி வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற்கண்ணிற் பணிமின் கனிந்த' என்ற பதினொறாம் திருமுறை பாடலில், வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் என்று வேழமுகத்துப் பெருமானின் பெருமை குறித்து கூறப்பட்டுள்ளது.

முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் குறைந்த விலையில் உணவளிக்கும் பெண்

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான்! - முதலமைச்சர் வாழ்த்து

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துச் செய்தி வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற்கண்ணிற் பணிமின் கனிந்த' என்ற பதினொறாம் திருமுறை பாடலில், வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் என்று வேழமுகத்துப் பெருமானின் பெருமை குறித்து கூறப்பட்டுள்ளது.

முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் குறைந்த விலையில் உணவளிக்கும் பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.