ETV Bharat / state

சசிகலா விடுதலையாவதால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர்

author img

By

Published : Jan 25, 2020, 6:57 PM IST

சென்னை : சசிகலா விடுதலையாவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

tn_che_ release of Sasikala has no effect Mafa
சசிகலா விடுதலையாவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - க. பாண்டியராஜன்

சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தனர்.

சசிகலா விடுதலையாவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - க. பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜனிடம், ’சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”சசிகலா விடுதலையாவது மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அது கட்சியின் கருத்தல்ல. அவர் விடுதலையானாலும் விடுதலை அடையாமல் போனாலும் கவலை இல்லை.

ஈபிஎஸ், ஓபிஎஸ் எனும் ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்கள் தலைமையில் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க : 'சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி' - ராஜேந்திர பாலாஜி

சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரும் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தனர்.

சசிகலா விடுதலையாவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - க. பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜனிடம், ’சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ”சசிகலா விடுதலையாவது மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அது கட்சியின் கருத்தல்ல. அவர் விடுதலையானாலும் விடுதலை அடையாமல் போனாலும் கவலை இல்லை.

ஈபிஎஸ், ஓபிஎஸ் எனும் ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்கள் தலைமையில் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே அது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க : 'சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் மகிழ்ச்சி' - ராஜேந்திர பாலாஜி

Intro:சசிகலா வெளியாவதால் எந்த கவலையும் இல்லை.அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் காலியகவும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.Body:சென்னை அருகே திருவேற்காடு நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள்,கல்வி நிறுவனங்கள்,பெரு வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா
பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாசுகட்டுப்பாட்டு ஆய்வு தேவையில்லை என மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார்.தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதனை சட்டரீதியாக தமிழக அணுகும் என்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்படி கொண்டு வருகிறார்கள் என்று தெரியாமல் அது குறித்து பேச இயலாலது என்றார்.Conclusion:மேலும் சசிகலா விடுதலையாவில் தங்களுக்கு ஒன்றுமில்லை என்ற அவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மகிழ்ச்சி என்று கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. சசிகலா விடுதலையானலும் அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் இல்லை என கூறினார். மேலும் தமிழகத்தில் அரசு தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு தாங்கள் காரணம் என கூறுவது தவறு.இதனை கண்டறிந்தது தங்களது போலிஸ் எனவும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.