ETV Bharat / state

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!

author img

By

Published : Sep 8, 2020, 8:00 PM IST

சென்னை: தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1ஆவது தெருவில் வசித்துவருகிறார் அப்துல் ரசாக். இவர் தனக்கு சொந்தமான டியோ இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்தார். இந்த வாகனம் திடீரென மாயமானது. இதையடுத்து அவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல், அதே பகுதியில் தஸ்தகீர் பாஷா என்பவருக்குச் சொந்தமான ஆக்டிவா பைக் காணாமல் போயிருந்தது. இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கென தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கண்ணன் ரவுண்டானா அருகே சுற்றித் திரிந்த தமிமுன் அன்சாரி (37), அமீனுள்ளா (40), அன்புச்செழியன்(56) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

அதில், அவர்கள் பல இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தமிமுன் அன்சாரி மீது பழைய வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்த இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:டிஎம்மில் கொள்ளை முயற்சி - 4 மணி நேரத்தில் பிடிபட்ட கொள்ளையர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1ஆவது தெருவில் வசித்துவருகிறார் அப்துல் ரசாக். இவர் தனக்கு சொந்தமான டியோ இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தி வைத்தார். இந்த வாகனம் திடீரென மாயமானது. இதையடுத்து அவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல், அதே பகுதியில் தஸ்தகீர் பாஷா என்பவருக்குச் சொந்தமான ஆக்டிவா பைக் காணாமல் போயிருந்தது. இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கென தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் கண்ணன் ரவுண்டானா அருகே சுற்றித் திரிந்த தமிமுன் அன்சாரி (37), அமீனுள்ளா (40), அன்புச்செழியன்(56) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

அதில், அவர்கள் பல இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தமிமுன் அன்சாரி மீது பழைய வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி, கிண்டி ஆகிய பகுதிகளில் பல திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவர்களிடம் இருந்த இரண்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:டிஎம்மில் கொள்ளை முயற்சி - 4 மணி நேரத்தில் பிடிபட்ட கொள்ளையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.